தமிழ் மக்களே ...
விழித்து கொள்ளுங்கள் வந்து விட்டது வேலை ...
வேலை உங்கள் மதியில் உள்ளது ..... .. செயல் உங்கள் விரலில் உள்ளது ....
ஆள் கூட்டி மாஸ் காட்டலாம் தேர்தல் கூட்டத்தில் ....
ஆனாலும் நம் ஆள் காட்டி விரலில் தான் உள்ளது அவர்கள் ஐந்து ஆண்டு ஆயுட் காலம் ...
வந்தே விட்டது ஐந்து வருடம் முன் நாம் செய்த தவறுக்கான பிராயசித்தம் ..
இதோ தினமும் வருகின்றார்கள் .... நம் நாளைய பாரதத்தை புரட்டி போட போகின்றார்களாம் ...
வார்த்தை அவர்களுக்கு என்றுமே தடை இல்லை ......
வார்த்தைகளில் வெல்லம் வடியும் ..... வெற்றி பெற்றாலோ வேதனை தான் மிச்சம் ...
இன்று சொல்லுவார்கள் நான் உங்களின் தொண்டன் என்று வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து .......
நாளை, நாம் அவரை கேவலம் கேள்வி கூட கேட்க கூடாது என்றும் சொல்லுவார் ...
காரணம் என்ன வெனில் ...
அவர்களும் மக்கள் மன்றத்தில் கேள்வியே கேட்க மாட்டார்களாம் ...
அடுத்த நான்கு வருடத்தில் இவர்களுக்கு மன்னர் ஆட்சி தான் நினைவில் இருக்கும் ...
ஆமாம் ஆமாம்.... இருக்காதா ... .. நாம் தான் amnesia நோயாளிகள் ஆயிற்றே ....
நம் தொகுதியின் தேர்ந்து எடுக்க பட்ட வேட்பாளர் யார் என்று நமக்கு எள்ளளவும் மீண்டும் தெரிந்து கொள்ள கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் அடுத்த ஐந்து வருடத்திற்கு நடந்து கொள்ளுவார் ....
மீண்டும் நாம் ஐந்து வருடம் கழித்து தான் பிராயச்சித்தம் தேட வேண்டும் ....
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் இவ்வாறும்
உடையான் அரசருள் ஏறு !!!
என்று அய்யன் வள்ளுவன் கூறியதை அப்படியே தவறாக எடுத்து கொண்டுள்ளார்கள் போலும்
படை - அடியாட் படை
குடி - டாஸ்மாக் கடை
கூழ் - பிரியாணி பொட்டலம்
எனவாக இவர்கள் ஆட்சி செய்ய நம் ஆட் காட்டி விரலே சென்ற முறை சாட்சி சொல்லியது ...
இவர்கள் நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று என்று பேசுபவர்கள் இல்லை..
ஆம்.. கடந்த ஐம்பது வருடமாக ஒரே வாக்குறுதி தானே கொடுக்கின்றனர் ...
கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற போகின்றார்களாம் கவரில் வைத்த பணத்தை கொடுத்த படியே கூறுகின்றார்கள் ..
காந்தி சிரிக்கின்றார் கவருக்குள்ளே ....
0 comments:
Post a Comment