வயிறு அரங்கம் !!



மனிதனுக்கு 'மண்' ஆசை, 'பெண்' ஆசை, 'பொன்' ஆசை இருப்பது போல்,
'உண்' ஆசையும் உண்டு ... உண் ஆசை என்றால் உண்ணும் ஆசை ...

'மண்' ஆசையால் வந்தது மகாபாரதம் ...
'பெண்' ஆசையால் வந்தது ராமாயணம் ...
'பொன்' ஆசையால் வந்தது GRT, பிரின்ஸ் , ஸ்ரீ, லலிதா மற்றும் DAMAS ஜ்வெல்லேரி.
'உண்' ஆசையால் வருவது ... வேறென்ன வயிற்று வலி தான் ...

பெரியவர்கள் தலைக்கணம் கூடாது என்று கூறி இருக்கின்றார்கள்.
தலைக்கணம் கூடாது தான் .. வயிற்று கணமுமா கூடாது ......
இல்லை, வயிற்று கணம் ஏற்று கொள்ள பட்டது தான் ... ஆனாலும் அரைக் கணம் மட்டுமே போதும் ...
வயிற்றில் முழு கணமும் ஏற்றினால், வயிற்றில் உள்ள மாவு அரைக்கும் மெஷின் எப்படி வேலை செய்யும் ..

உணவு உண்ணும் போது அரை வயிறு மட்டுமே உண்டு, மற்றொரு கால் வயிற்றுக்கு தண்ணீர் அருந்தி, மீதமுள்ள கால் வயிற்றை காலியாக வைத்தால், வைத்தியரை பார்க்கும் வேலை வராது ...
உணவே மருந்தாக இருக்கும்.
இதை மீறினாலோ வைத்தியர் கொடுக்கும், புரியாத கையெழுத்தில் கிறுக்கப்பட்ட காகிதத்தில் உள்ள தெரியாத மருந்துகளை தின்ன வேண்டியது தான்.
பின் மருந்தே உணவாகும் ...

ஒரு நாளைக்கு ஒரு ஃபுல் மீல் மட்டுமே உண்பவர் யோகி ..
ஒரு நாளைக்கு இரு ஃபுல் மீல் சாப்பிடுபவர் போகி ....
ஒரு நாளைக்கு மூன்று ஃபுல் மீல் திங்கிறவன் துரோகி ...

சிலர் இருக்கின்றார்கள் ...அவர்கள் தொண்டை வரை சாப்பிட்டு விட்டு, சாஷ்டாங்கமாய் எழுந்து நின்று, உடலை ஒரு குலுக்கு குலுக்குவார்கள். பின் மேலும் கீழும் ஒரு குதி குதித்து, மீண்டும் சாப்பிட உட்காருவார்கள்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள், அவர்கள் unlimited மீல் ஆர்டர் செய்து ஒரு மணி நேரம் நோகாமல் சாப்பிட்டு விட்டு, சர்வர்-ஐ கூப்பிட்டு இலையை எடுக்க வேண்டாம், என்று எழுந்து, கையை கழுவாமலே சிறிது தூரம் நடந்து விட்டு வந்து, சர்வர்-ஐ மீண்டும் கூப்பிட்டு, எங்கே அந்த சாம்பாரை எடுத்து வா, என்று அரங்கேற்றத்தை ஆரம்பிப்பார்.

அதிலும் சிலர் இருக்கின்றார்கள் ஒரே வேளையிலேயே இரண்டு மூன்று unlimited மீல்ஸ் சாப்பிடுவார்கள் .... அவர்களை உணவு பஞ்சத்திற்கு காரணமான தேச துரோகி என்றே கூறலாம்.

அப்படி பட்டவர்களை சோமாலியா, உகாண்டா , எதியோபியா போன்ற நாடுகளுக்கு நாடு கடத்துவது நலம் .. அது மட்டுமின்றி அவர்களுக்கு அந்த நாட்டிலே வைத்து நம் செலவிலேயே 'மாய பஜார்' திரைப்பட ஒரிஜினல் DVD போட்டு காட்டி மேலும் வெறுப்படைய செயலாம் ...

பசியும் பட்டினியும் போக்குவோம் என்று பலர் கூற கேட்கின்றோம் ..
அவர்களுக்கு நாங்கள் சொல்வது இது தான் ... நீங்கள் பட்டினியை மட்டும் போக்க முயற்சி எடுங்கள் .. பசி தன்னாலேயே போய் விடும் ...
பசி என்பது மனிதனின் உடலில் இயற்கை. பட்டினி என்பதோ பசியை போக்க இயலாமை.

ஒருவனுக்கு வேளா வேளைக்கு எப்பொழுதும் சரியான நேரத்தில், ஒரே உணவை, ஒரே அளவில் பல மாதம் கொடுப்போம்....................
...... பின் சில நாட்களுக்கு அதே உணவை அந்த குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்காமல் சிறிது காலம் தாழ்த்தி கொடுத்தோமேயானால், எவ்வளவு காலம் தாழ்த்துகின்றோமோ அவ்வளவு பசி அவனுக்கு எடுக்கும் ... ......................... அதோடு, அவன் என்னதான் ஒரே உணவை உண்டாலும், காலம் தாழ்த்தும் அளவுக்கு நிகராக ருசியும் அதிகரிக்கும்.. ...................... இப்போது ருசியோ அதிகரித்து விட்டது.... ................அப்புறமென்ன , எப்போதும் உண்ணும் அளவை காட்டிலும் அதிகமாகவே சாபிடுவான்..
இது தான் ... Law of Direct Proportion !!!! பசி = (k * ருசி) = (k * உணவின் அளவு)

இவற்றிற்கும் மேலே பாட்டி கை பக்குவம் , அம்மாவின் அன்பு கலந்த உணவு என்று பல காரணங்கள் ருசிக்கு காரணியாக கூறப்பட்டு வந்தது அக்காலத்தில் ...
ஆனால் இக்காலத்திலோ,
பெண்கள் வாயார புகழ்வது கணவனின் கை பக்குவதையே ...

பெண்கள் இரவில் 'கோலங்கள்' பார்த்து பின் 'அரசி'-யை பார்த்து கொண்டிருக்க,
ஆண்கள் காய்கறிகள் வெட்டி விட்டு அரிசியை பார்த்து கொண்டிருகின்றார்கள், அடுப்படியில்.

பின் கை பக்குவத்துக்கு என்ன குறைச்சல் !!!

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்