பாதாள உலகம் !!


காவியங்களில் மொத்தம் மூன்று உலகம் உள்ளதாக சொல்லுவார்கள்.
மண்ணுலகம்,
வானுலகம் மற்றும் ,
பாதாள உலகம் என்று.

மனிதன் மண் உலகில் மட்டும் சஞ்சரித்து கொண்டு இருந்தான். பின் அவன் எண்ணங்கள் மென் மேலும் உயர்ந்து, ரைட் சகோதர்கள் முயற்சியால், ஆராய்ச்சியை விரிவு படுத்தி ஆகாய விமானம் கண்டுப் பிடித்தான்.இதற்கு காரணம் பறவை, பறவையை பார்த்து பிரமித்து, நம்மாலும் பறக்க முடியுமா என்ற எண்ணம் தான்.

நியூட்டனின் மூன்றாம் விதிப் படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. மனிதன் தரையில் இருந்தான். தரைக்கு மேலே ஆகாய விமானம் பறக்க விட்டான். இப்போது இந்த வினைக்கு எதிர் வினையால் சமநிலை படுத்த வேண்டும் என்றால் பாதாள உலகம் தான் போக வேண்டும்.
ஆனால் பாதாள உலகம் போக முடியுமா. முடியும் என்று மனிதன் நிருபித்திருக்கிறான்.

அந்த காலங்களில் அரசர்கள் போர் காலத்தில் தப்பி செல்ல சுரங்க பாதைகளில் செல்லுவார்கள். அது அரசாட்சி. இதுவோ மக்களாட்சி. இப்போது, மக்களும் அலுவலகத்திற்கு சுரங்க பாதையில் செல்லாம்.

பாதாள உலகத்திற்கு வாய் உண்டா என்று கேட்டால், உண்டு ..
அந்த வாய்கள் லண்டன், நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ, ரோம் என்று இருந்து, இப்போது இந்தியாவில் டெல்லி,கொல்கத்தா நகரங்களில் இருந்து, சென்னையிலும் வாயை திறக்க காத்துக் கொண்டு இருக்கிறது. இவற்றிலும் மிக தொன்மையான வாய் லண்டனில் உள்ளது.

'தடக் தடக், தடக் தடக்' என்று தரையில் தாளத்துடன் புகை வண்டி பார்த்து பிரயாணித்து இருக்கிறோம். இப்போது பாதாள உலகத்தில் சத்தம் சற்றே குறைவாக உள்ள மெட்ரோரயில் வண்டியில், பிரயாணித்து பிரமிக்க போகின்றோம், விரைவில் சென்னையில். நம் சிங்கார சென்னையில் !
சத்தம் தான் குறைவே அன்றி, வேகம் இல்லை. சத்தம் சிறுத்தாலும் வேகம் சிறுக்காது.

இந்த மெட்ரோ வண்டியை ிட சீறிப்பாயும் வேகத்தில், தண்டவாளத்தில் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பறந்து செல்லும் புல்லட் ரயில்களும் இப்போது வந்து உள்ளன, ஜப்பானில்.

அப்படி பட்ட ஜப்பான் நாட்டில் இருந்து தான் நம் சென்னையின் மெட்ரோ ரயில் வண்டி வேலைக்கு கடனுதவி கிடைத்துள்ளது.

பாதாள உலகத்தில் உள்ள மெட்ரோ ரயில் வண்டியில் பிரயாணம் செய்வதில் ஒரு சவுகரியம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் யாரும், சாலை மறியல் பண்ணுவது போலவோ, புகைவண்டி மறியலில் ஈடு படுவது போலவோ மறியலில் ஈடு பட மாட்டார்கள்.

மேலும் 'இந்தி எதிர்க்கிறேன்', ஒரு ரூபாய்க்கு அரிசி தந்ததால் எல்லோரும் குண்டடித்து விடுவார்கள் எனக்கூறி,'தொந்தி எதிர்க்கிறேன்' என்று அரசியல்வாதிகள் அகலக் கால் வைதார்களேயானால், அகால மரணம்தான் அடைய வேண்டும்.
அரசியல் கட்சிகளே, ஜாக்கிரதை ! . அதனால் சற்று சிந்தித்து போராடுங்கள்.

இந்த திட்டதிற்கு ஒதுக்க பட்டுள்ள பணம் 14600 கோடி ரூபாய். மெட்ரோ ரயில் வண்டி பணிகள் 2015 -இல் முடியும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

இந்த மெட்ரோ ரயில் வண்டியில் பிரயாணம் பண்ணும் போது, பிரணாயாமம் தெரிந்திருக்க வேண்டியது இல்லை. என்னதான் கூவம் நதியை கடந்து சென்றாலும், மூச்சு பயிற்சிக்கு அவசியம் இருக்காது.

ஆகாய விமானம் பறவையை பார்த்து பிரமித்து கண்டு பிடித்தான்.
இந்த மெட்ரோ ரயில் ரயிலை எதை கண்டு வியந்து கண்டு பிடித்திருப்பான்.
ஒருவேளை தூங்கிக்கொண்டு இருக்கும் போது தொல்லை செய்த பெருச்சாளியை கண்டு இருக்குமோ.

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்