என்றாவது ஒரு நாள், துக்குளியோண்டு வாக்கியமாவது விகடனில் வந்தால் இவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். இப்போது ஒரு கட்டுரையே ஆன்லைன் யூத்புல் விகடனில் வந்ததால், மகிழ்ச்சியில் கூறுவது.
பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் சங்கரன் ஐயா அவர்களுக்கும், இருதயராசு ஐயா அவர்களுக்கும். தமிழையே ஆங்கிலத்தில் பாடம் எடுத்த ஆசிரியர் அவர்களுக்கும்.
ஆபீஸ் நூலகத்தில் இருந்து படிக்க 'ஆனந்த விகடன்' கொண்டு வந்த அன்னைக்கும். 'தினமணி' படித்து, எங்களையும் படிக்க தூண்டிய தந்தைக்கும்.
'பொன்னியின் செல்வன்' படித்து நிறைய பேசிய செந்தமிழ் நகர் பெரியம்மாவுக்கும், ஆர்த்தி அக்காவுக்கும்.
'சிவகாமியின் சபதம்' படிக்க செய்த பத்மா அத்தைக்கும்.
பல புத்தகங்களை தன் வீட்டு நூலகத்தில் இருந்து படிக்க ஊக்குவித்த திருநாவுக்கரசு பெரியப்பாவுக்கும்.
சிறந்த தமிழ் நாவல்கள் எழுதியுள்ள, தமிழின் அரும் பெரும் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் சி. எம். முத்து சித்தப்பாவிற்கும்.
'குறிஞ்சி மலர்' படிக்க சொல்லி தூண்டிய மீரா மாமிக்கும்.
'சுஜாதா' மேல் ஈர்ப்பு ஏற்படுத்திய முரளி மச்சானுக்கும்.
Last but not least.
அருமை நண்பர்கள் கவி தேசிகன், எமர்சன், ராம்குமார், டேனியல் போன்ற தமிழ் விரும்பும் நண்பர்கள், மேலும் இவர்கள் உள்ளே தமிழ் தீ பல நேரங்களில் காண முடிவது.
கவி தேசிகனின் கருத்தான கவிதைகள், எமர்சனின் எதார்த்த கவிதைகள், ராம்குமாரின் கடுமையான கவிதைகள், டேனியலின் தமிழ் சிரிப்பு திரைக்கதைகள், என இவர்கள் உள்ளே தமிழ் தீ பல நேரங்களில் காண முடிவது.
படிக்க வைத்தும், தங்கள் படைப்பால் பிரமிக்கவும் வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஹரீஷ்
0 comments:
Post a Comment