உன்னைப் போல் ஒருவன் !!


டோலி தெரியுமா உங்களுக்கு? டோனி இல்லை சார். டோலி?

இந்த டோலி தான் முதன் முதலாய் ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆனவன்.

நாம் ஏதோ ‘அவன்’ ‘இவன்’ என்று டோலியை மனிதன் போல் பாவித்து பேசுகிறோம். ஆனால், இந்த டோலி மனிதன் இல்லை மிருகம். அதுவும் மனிதன் செய்த மிருகம்.

டோலி ஒரு செம்மறி ஆடு. இந்த செம்மறி ஆட்டை உருவாக்கியது விஞ்ஞானிகள். ஆனாலும் ஈன்றெடுத்தது மற்றொரு செம்மறி ஆடு.

“மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்”, என்று கூற முழு தகுதி உடையது இந்த டோலி செம்மறி ஆடு.

பூங்காவில் உள்ள ரோஜா செடியில் இருந்து காவலாளி பார்க்காத போது, ஒரு சிறு கிளையை ஒடித்து கிளப்பிட்டு வந்து, வீட்டு தோட்டத்தில் நட்டு வளர்த்து, ரோஜா பூ பூக்க வைப்பதும் க்ளோனிங் தான். இதுவோ செடி க்ளோனிங். இதிலும் மிருக க்ளோனிங் தான் இந்த டோலி செம்மறி ஆடு.


க்ளோனிங் என்றால் என்ன ? க்ளோனிங் என்றால் காப்பி அடிப்பது. அதான் சாரே, ஸெராக்ஸ் எடுக்கிறது தான் க்ளோனிங். அதைத்தான் மாணவர்கள் நாங்கள் தேர்வில் செய்கிறோமே. இதில் என்னத்த இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்கிறார்களோ? தெரியவில்லை. மாணவர்கள் எங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சமாவது இந்த விஞ்ஞானிகளுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பி அடித்து, மறந்தும் கூட அடுத்தவன் பரீட்சை எண்ணையே எங்கள் தாளிலும் எழுதாமல், மறக்காமல் எங்களுடைய தேர்வு எண்ணையே ஞாபகம் வைத்துக் கொண்டு எழுத வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது. அதில் ஒரு சதவிகித பொறுப்புணர்ச்சி இருந்தாலே விஞ்ஞானிகள் மனித க்ளோனிங் பற்றி சிந்திக்காமல் இருப்பார்கள்.


மனித க்ளோனிங் செய்யும் முறை என்னவென்றால், முதலில் பெண்ணிடம் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அந்த கரு முட்டையில் உள்ள நியூக்ளியஸ் நீக்கப் படும்.
அடுத்ததாக ஆணிடம் இருந்து ஒரு செல் (அது எந்த செல்லாகவும் இருக்கலாம்) எடுத்து வைத்துப் படும்.

பிறகு ஆணுடைய செல்லும், பெண்ணுடைய நியூக்ளியஸ் இல்லாத கரு முட்டையும் மின்சாரத்தின் உதவியோடு இனைக்கப்படும்.

ஆணுடைய செல்லை உள்கொண்ட அந்த கருமுட்டை இப்போது பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.

அவ்வளவுதான். பத்தே மாததில் சூடான குழந்தை தயார் ! !! !! !

பின்னே என்ன சார், டி.வியில் காய்கறி நறுக்கி போட்டு சமையல் குறிப்பு சொல்ற மாதிரின்னா சொல்றா. மனுஷாளை உருவாக்க மின்சாரம் போதுமாம் சார். கேட்கவே விரசமா இல்லியோன்னா. காதல் எனும் மின்சாரம் இருக்கச்சே இந்தெ கரன்ட் வச்சு கொழந்த பெத்துக்கறது எல்லாம் பிரம்மாவுக்கே அடுக்காது, ஆமாங்கானும். அதிலும் திருப்போருர் முருகன் கோவிலில் பிள்ளை பொறக்கவேனும்னு நினைச்சிண்டு மரத்தில் கடுதாசி எழுதி வச்சா, மத்ததை அந்த கந்தசாமி பாத்துப்பான். அத எல்லாம் விட்டுட்டு இந்த க்ளோனிங் கிளீனிங் எல்லாம் நமக்கு சரிப்படுமா. சித்தெ என்னிய தனியா இருக்க விடறேளா !!

……………
……………
……………
……………
……………
……………

அதிலும் கணவன் வெளிநாட்டிலோ, வெளி மாநிலத்திலேயோ இருந்து மனைவியை வந்து காண முடியாத நிலை, மற்றும் முக்கிய வேலை பளு எனில் தன்னுடைய செல் ஒன்றை எடுத்து எஃஸ்பிரெஸ் டெலிவெரியில் கொரியர் அனுப்பி வைத்தால், பத்து மாதத்தில் சூடான குழந்தை டெலிவெரி நடக்கக் கூடும், இந்த மனித க்ளோனிங்கால்.

இந்தியாவிற்கு மனித க்ளோனிங் தேவையா ?
இந்தியாவில் இப்போதே 120 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தியாவில் ஏற்கனவே வேலையின்றி பல கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் க்ளோனிங்க் ஒன்றுதான் குறைச்சல். போங்க சார் ! போய் செவ்வாய் கிரகத்தில் சோறு பொங்கி சாப்பிட முடியுமான்னு மொதல்ல பாருங்க சார்.

ஹரீஷ்

2 comments:

ungalrasigan.blogspot.com 21 October 2009 at 19:40  

மெல்லிய நகைச்சுவை கலந்து எழுதுகிற உங்கள் பாணி நன்றாக இருக்கிறது. தொடருங்கள்!

பொன்னியின் செல்வன் 22 October 2009 at 19:22  

_/!\_ : ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றிகள் ! அப்படியே ஆகட்டும்.. அவ்வப்போது, தலையில் குட்டு வைத்தும் கருத்துக்களை கூறுங்கள்.
பி.கு : என் தலையில் !!!

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்