ராம் செத்தாராம்


ற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு.
கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கக் கூடும்; தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்று.
அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவி பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் சாதியாம் :(
தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் சாதியாம் :(
தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் சாதியாம் :(
காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் சாதியாம் :(
இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றானாம். எப்படி இருக்கிறது நியாயம்? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் சாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் சாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான். எப்போது என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்!

நன்றாக கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்?

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறோம் என்றால்:
- வர்ணாசிரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- சாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத் தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும்.

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம (க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விகாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம (க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதா பாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?
[ அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist இடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]

ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துக் கொண்டுதான், இன்றைய தேசிய கட்சிகள் காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது. அது போல, 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.

[ எடக்கு மடக்கா கேட்பதாய் எண்ணி, 'எப்போதுமே தல விழுந்தால்?' என்று கேட்டால்; 'அந்த நாணயம், அஜித் ரசிகருடைய நாணயம்' என்றுதான் சொல்ல இயலும். ]

அல்லது, புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது Accused ஆச்சாரியார் சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :)

வெளிநாட்டுகாரனோ கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம (க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடிப்பது காவித் தீவிரவாதம் தானே.

பகுத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும் தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியாதே! இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, சாதி, மூட பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக் கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், சாதி, மூட பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார். 

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

ராம் செத்தாராம்

12 comments:

suresh 6 November 2010 at 02:49  

தம்பி உன்னோட அட்ரஸ் எங்கப்பா இருக்கு நேர்ல உக்காந்து பேசுவோம்

suresh 6 November 2010 at 03:02  

கம்பன் கண்ட சிவராம தரிசனம்


அன்று மிதிலையின் வரலாற்றில் ஒரு பொன்னாளாக ஆகப் போகிறது.

முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு போல நிற்கும் அந்த சிவதனுசு என்னும் வில்லை உடைக்கவேண்டும், பாற்கடல் பள்ளியில் பிரிந்த தெய்வ தம்பதியர் ஒன்று சேரவேண்டும் – அது ஒன்றுதான் பாக்கி. அண்ணலின் நெஞ்சிலும் அவளே நீக்கமற நிறைந்து விட்டாள். இரவு முழுவதும் அவளையே எண்ணி, எப்போது நிலவு மறையும், கதிரவன் உதிப்பான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் இராமன்.

பொழுது புலரத் தொடங்குகிறது. அதைக் கம்பன் இப்படி விவரிக்கிறான் -

ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம்
மயல் உழந்து, தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடருடைய செங்கமலம்
முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர்முக யா-
னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
விழியே போல், உதயம் செய்தான்.
(மிதிலைக் காட்சிப் படலம், 150)

[ததையும் மலர்த் தார் அண்ணல் – மலர்கள் அடர்ந்த மாலையணிந்த இராமன்; மயல் உழந்து – மயங்கி; தளரும் ஏல்வை – தளரும் காலத்தில்; செய்ய வெய்யோன் – இளஞ்சிவப்பாக எழும் சூரியன்; புகர்முக யானை – புள்ளிகளுடைய முகத்தயுடைய யானை; உரிவை – உரித்த தோல்; நுதல் – நெற்றி]

இருளைக் கிழித்துக் கொண்டு உதயகிரி மீது இளஞ்சூரியன் எழுகிறான். அது எப்படியிருக்கிறது? புதையிருள் வடிவம் கொண்ட கரிய யானையின் (கஜாசுரனின்) தோலை உரித்துப் போர்வையாகப்

suresh 6 November 2010 at 03:03  

போர்த்திக் கொண்ட மாமலையாகிய மகாதேவனின் நெற்றிக் கண் திறப்பது போல் இருக்கிறதாம்!

சுடரோன் எழுந்து விட்டான். அவனது கதிர்கள் நாற்புறமும் பரவுகின்றன. அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும்
கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர, வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(மிதிலைக் காட்சிப் படலம், 153).

[மறை – வேதம்; கின்னரர்கள் - குதிரை முகமும் மனித உடலும் கொண்டு பறந்து கொண்டே இசை பாடும் தேவ வர்க்கத்தினர்; வேலை – கடல்; மண்ணும் மணி முழவு – மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட அழகிய மிருதங்கம்; வாள் இரவி – ஒளி பொருந்திய சூரியன்; கண்ணுதல் வானவன் – நெற்றிக் கண்ணுடைய சிவபிரான்]

ravivarma_rama_breaking_bowதேவரும், முனிவரும், மனிதரும் புகழ்ந்தேத்த, ஆர்ப்பரிக்கும் அலைகடலே மிருதங்கமாக ஒலிக்க, அந்த வான் அரங்கில் சிவ நடனம் நிகழ்கிறது. ஆடும் கூத்தனின் செஞ்சடை விரிவது போன்று கதிர்கள் விரிந்து உலகனைத்தையும் தீண்டுகின்றன.

இப்படி, சீதா கல்யாணம் நடக்கும் அந்த சீரிய நாளின் உதயத்தை சிவனது திருக்காட்சியாகக் கம்பன் வர்ணித்திருக்கிறான். சிவதனுசை முறிக்கப் போகும் மாவீரனின் பெருமைக்கு அந்த நாளின் உதயமே கட்டியம் கூறுகிறது என்பதைக் குறிக்கத் தானோ?

சபை கூடிவிட்டது. அரசகுமாரர்களை விசுவாமித்திர முனிவர் ஜனக மகாராஜனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ”குழந்தாய் ராமா, இந்த வில்லைப் பாரேன்” (”வத்ஸ ராம, தனு: பஷ்ய” – வால்மீகி) என்று குறிப்புணர்த்துகிறார் முனிவர். முனிவரின் நினைப்பைப் புரிந்து கொண்ட இராமன் எழுகிறான். அதைக் கம்பன் பாடும் அழகு தான் என்னே!

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்;
“அழிந்தது வில்” என வானவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்;
(கார்முகப் படலம், 26)

[கொழுங்கனல் – கொழுந்து விட்டெரியும் தீ; முப்பகை வென்றார் – காமம், கோபம், மயக்கம் முதலாகிய மூன்று பகைகளையும் வென்ற முனிவர்கள்]

வேள்வியின் முடிவில் பூர்ணாகுதியாக சொரிந்த நெய் முழுதும் வழிய, வேள்வித் தீ ஜுவாலையாகக் கொழுந்து விட்டு விண்ணை நோக்கி எழுவது போல, இராமன் எழுந்தானாம்! கார்மேக வண்ணனைத் தீவண்ணனாக இங்கே கவி சித்தரிக்கிறார். (”செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே” – அப்பர் தேவாரம்)

இந்த உவமை மிகவும் அழகானது. வேட்டல் என்றால் விரும்புதல். வேள்வி என்ற சொல் அதிலிருந்து வருகிறது. தெய்வீக சங்கல்பமே இச்சையாக மாறி வேள்வியாக உருக்கொள்கிறது. வேள்வியின் விளைவான பலன் நெருங்கப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் தீ எழுவது போன்று, சீதா ராமர் திருமணம் நடக்க வேண்டும் என்ற தெய்வ சங்கல்பத்தின் உருவாக ராமன் வில்லுடைக்க எழுகிறான்.

சூரிய, சந்திரரை திருமாலின் கண்களாகக் கூறுவது மரபு. ”திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல், அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்” என்பது திருப்பாவை. அதே போன்று சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றையும் சிவனது முக்கண்களாகக் கூறுவார்கள். மூன்றாவதாகிய நெற்றிக் கண் அக்னி வடிவானது. நாளின் உதயத்திலேயே ராமனைத் தீண்டிய செங்கதிரின் உள்ளுறை பொருளான அந்த அக்னி வடிவமாக இங்கே ராமன் வில்லுடைக்க எழுகிறான் என்றும் கொள்ள இடமிருக்கிறது. ”பொறுமையில் பூமிக்கு நிகரானவன், அறத்திற்காகக் கோபமுறும் தருணத்திலோ காலாக்னிக்கு நிகரானவன்” (காலாக்னி ஸத்ருச: க்ரோதே, க்ஷமயா ப்ருத்வீ ஸம:) என்றல்லவோ வால்மீகி முனிவர் ராமனின் குணாதிசயங்களைப் பட்டியலிடுவார்!

’கங்கை வார் சடை’

ravivarma_gangadharaஅயோத்தியா காண்டத்தில் மற்றொரு காட்சி.

நகரை விட்டு நீங்கி ராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வனத்துக்குள் நுழைகிறார்கள். கங்கைக் கரையை அடைந்து முனிவர்களின் உபசாரத்தை ஏற்று, கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை. கம்பனின் கவிதை இதைக் காட்சியாக விரிக்கிறது –

வெங்கண் நாகக் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
(கங்கைப் படலம், 18)

[வெங்கண் நாகக் கரத்தினன் – வெம்மையான கண்களைக் கொண்ட நாகங்களைக் கரத்தில் ஆபரணமாக அணிந்த சிவன்; சிறிய கண்களைக் கொண்ட யானையின் துதிக்கை போன்ற கம்பீரமான கரங்களைக் கொண்ட இராமன்; வகிர்த் திங்கள் – பிறை நிலா]

suresh 6 November 2010 at 03:04  

தில்லை அம்பலத்திலே உமையவள் மகிழ்ந்து காண கௌரி தாண்டவம் ஆடிய கங்காதரனின் திருவுருவை ஸ்ரீராமனின் கங்கை நீராட்டத்தில் இணைத்துக் காட்டுகிறது கம்பன் கவி. வைணவத்தையும், சைவத்தையும் மட்டுமல்ல, வடக்கையும், தெற்கையும் கூட இணைக்கிறது.

காசி ராமேஸ்வரம்:

வால்மீகி ராமாயணத்தில் சேதுக் கரையில் ஸ்ரீராமன் சிவபூஜை செய்ததாக வரும் பிரசங்கம் இல்லை. ஆனால் கம்பராமாயணத்தில் உள்ளது.

இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பும்போது சீதைக்கு சேதுவைக் காட்டி அதன் மகிமையை விரிவாக இராமன் விளக்குகிறான். சேதுக் கரையில் இறங்கி திருவணையை வாய் கீறி, அந்த அணைக்குத் தெய்வங்களைக் காவலாக நிறுத்துகிறான். அகத்தியர் அப்போது அங்கு வந்து ராமனைச் சந்தித்து, சிவபூஜை செய்யுமாறு கூறுகிறார். கங்கையிலிருந்து சிவலிங்கம் கொண்டுவர அனுமன் போய் வரத் தாமதமாகிறது. அப்போது -

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே
‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

[ஆலம் – ஆலகால விஷம்; ஞாலம் உண்டவர் – பிரளய காலத்தில் உலகனைத்தையும் தன் வயிற்றில் ஒடுக்கும் மகாவிஷ்ணுவாகிய ராமன்]

suresh 6 November 2010 at 03:05  

’முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண்மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்

[முகுத்தம் – முகூர்த்தம்]

ஒத்தபூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப.

(யுத்தகாண்டம், மீட்சிப் படலம், 34-36. கம்பன் கழகப் பதிப்பு, பக்-1678)



கம்பன் வாழ்ந்த காலகட்ட்த்தில் (11-ஆம் நூற்றாண்டு) இராமேஸ்வரம் பற்றிய இந்தப் புராண ஐதிகம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களிலேயே இராமேஸ்வரம் குறிப்பிடப் படுகிறது.

தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி
ஏவிய வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை..

[வவ்விய – கவர்ந்து சென்ற; வாட்டி – அழித்து; வெஞ்சிலை – வெம்மை தரும் வில்]

கம்பனுக்கு முன்பே ஸ்ரீராமனை அண்ணல் என்று அழைத்திருக்கிறார் சம்பந்தர்!

ramalinga_pujaதமிழகம் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் மைசூர்ப் பகுதியில் காவிரி சங்கமத்தில் ராமநாதபுரா என்ற ஊரில் இதே ஐதிகத்துடன் கூடிய பழமையான கோயில் உள்ளது. ஆந்திராவில் வாரங்கலுக்கு வடக்கே “ராமப்பா குடி” என்றே ஒரு ஊரும், அதில் காகதீயர் காலத்திய ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலும் உள்ளது. மிக அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஒரு மாபெரும் சிற்ப அற்புதம் இந்தக் கோயில். எனவே ராமேஸ்வரம் பற்றிய ஐதிகமும் ஒரு தொன்மை மரபு தான் என்பதில் ஐயமில்லை.

வால்மீகியின் ராமன் “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று தன்னை மனிதனாகவே கூறிக் கொள்பவன். அந்த இலக்கணத்தின் படியே பெரியோர்களையும், தேவதைகளையும், முனிவர்களையும் அவன் வணங்கிச் செல்வதாக நெடுகிலும் வால்மீகி முனிவர் சொல்லிச் செல்கிறார். உலக அன்னையாகிய சீதாதேவி படகில் கங்கை நதியைக் கடக்கையில் (இன்றைக்கும் இந்துத் தாய்மார்கள் செய்வது போன்று) தங்கள் குடும்பத்தையும், குலத்தையும் காக்கவேண்டும் என்று கங்கையையும், யமுனையையும் வேண்டிக் கொள்கிறாள், நேர்த்திக் கடன் செலுத்துவதாகவும் பிரார்த்தனை செய்கிறாள்! கானகத்தில் புனித விருட்சங்களை ராமரும், சீதையும் வணங்குவதாகவும் வருகிறது.

suresh 6 November 2010 at 03:07  

இதனால் இராமன் பரம்பொருளின் அவதாரம் என்ற கருத்து ஒரு மட்டுக் குறைகிறது என்று சில சமயவாதிகள் எண்ணினால் அது அறியாமையும், ஸ்ரீராமனின் அவதார ரகசியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுமே ஆகும். போரில் இறந்த வானரர்கள் அனைவரையும் உயிர்ப்பித்த ராமன் ஜடாயு இறந்தபோது கதறி அழுகிறான். அதற்கு எப்படி தர்க்கபூர்வமாக விளக்கம் கொடுக்க முடியும்? இவையனைத்தும் அவனது அலகிலா விளையாட்டு, “நடையின் நின்றுயர் நாயகனின்” தெய்வலீலையில் ஒரு அங்கம் என்று தான் கொள்ளவேண்டும். அவனது சிவபூஜையும் அவ்வாறே என்றே கருதிக் கம்பன் தன் காவியத்தில் அதனைச் சேர்த்திருக்க வேண்டும்.

ravivarma_rama_sita_lakshmana_smallஅதோடு, பிரம்மஹத்தி (அல்லது வீரஹத்தி) தோஷம் அகல்வதற்காக ராமன் சிவபூஜை செய்தான் என்றும் சொல்லப் படுகிறது. அதர்மத்தை அழித்தொழித்த ஸ்ரீராமனின் செய்கை எப்படி பாவமாகவும், தோஷமாகவும் ஆகக் கூடும்? ராமாயணத்தின் மையத் தத்துவத்திற்கே முரணாக அல்லவா இருக்கிறது இது! இந்த ஐதிகம் சாதிய, ஜோதிட, பரிகார வெறியர்களால் ஒரு கட்ட்த்தில் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரசங்கத்தை மட்டுமல்ல, இதிகாச புராணங்களின் எல்லா நிகழ்வுகளையுமே நாள்கள் கோள்களின் பலன்களாகவும், விதிப் பயன்களாகவுமே சித்தரிக்கும் ஒருவித இயந்திரத் தனத்தின் விளைவு அது. (உதாரணமாக: ஏன் ராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது என்றால் அவன் ஜாதகத்தில் அப்படி இருந்தது, சீதையின் ஜாதகமும் அப்படி இருந்த்து; வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்குக் குறித்த நாள் சரியில்லை.. இப்படியாக அது போய்க் கொண்டிருக்கும்). இத்தகைய ஒரு கண்ணோட்டம் ஜோதிடப் பிரியர்களான ஒரு சிறு கூட்டத்தாருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் இதிகாச, புராண நிகழ்வுகளில் அற்புதமாக இழையோடும் ரசானுபவத்தையும், அவற்றின் இயல்புத் தன்மையையும், பல சமயங்களில் அவற்றின் தெய்வீக, தத்துவ பரிமாணங்களையுமே குலைப்பதாக இருக்கிறது. எனவே இந்த “தோஷ நிவாரண” ஐதிகத்தை நிராகரித்து, தெய்வலீலையின் ஒரு அங்கமாக மட்டுமே ராமனின் சிவபூஜையைக் கருதவேண்டும்.

ராமேஸ்வர: என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சமத்காரமாக மூன்று விதங்களில் பொருள் கொள்ளலாம். ராமனாகிய ஈஸ்வரன் (ராம: ஈஸ்வரஸ்ச), ராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவன் (ராமஸ்ய ஈஸ்வர: ), ராமனைத் தனக்கு ஈஸ்வரனாகக் கொண்ட சிவன் (ராம: யஸ்ய ஈஸ்வர: ) !

ராமேஸ்வரத்தின் ஐதிகத்திற்கு இணையாக, காசியில் சிவன் எப்போதும் ராம நாம தியானத்தில் இருக்கிறார் என்றும், இறக்கும் உயிர்களின் காதில் தாரக மந்திரமான ராமநாமத்தை உபதேசித்து அவைகளைக் கரையேற்றுகிறார் என்றும் ஒரு தொன்மை மரபு உள்ளது.

அதையும் கம்பன் சொல்லியிருக்கிறான்.

வாலிவதம் நிகழ்ந்தவுடன், ராமன் வாலிக்கு முன்னே தோன்றுகிறான். நீண்ட விவாத்த்திற்குப் பின், வாலி ஸ்ரீராமனது அவதார ரகசியத்தை உணர்கிறான். தன் உயிர் போகும் தறுவாயில் பலவாறு பரம்பொருளான ராமனைத் துதிக்கிறான். இந்தத் துதிப் பாடல்கள் அனைத்துமே மிக அழகானவை.

suresh 6 November 2010 at 03:09  

continu read http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/

பொன்னியின் செல்வன் 6 November 2010 at 03:11  

சுரேஷ் அவர்களே,

பின்னூட்டத்திற்கு நன்றி! உங்கள் கருத்துக்களை இந்த பின்னூட்டத்திலேயே பதிவு செய்யலாம்.

மேலும் கட்டுரையின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணமாய், தாங்கள் தொடர்ச்சியாய் பின்னூட்டம் இடுவது மகிழ்ச்சி அளிக்கிறது!

கட்டுரையை படித்து உணர்ந்த பின்னர், உங்கள் பின்னூட்டத்தை படிப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்.
நீங்கள், எப்போது பின்னூட்டம் இடுவதை நிறுத்துகிறீர்களோ;
அப்போது, தாங்களே ராமன் என்பது கற்பனைதான் என்று உணர்ந்து விட்டீர்கள் என்பதை,
அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.


உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

D*A*R*A*N 6 November 2010 at 13:39  

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும்.-- hari superrr n true...

D*A*R*A*N 6 November 2010 at 13:40  

அல்லது, புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

---hari...am remembering 10th maths tuition :))))

Anonymous 12 November 2010 at 17:37  

சமயம் என்பது மக்களை மயக்கும் ஒரு போதைப்பொருள் என்றார் கார்ல் மர்க்க்ஸ்
அது போல போதையில் இருக்கும் ஒருவனிடம் நாம் என்ன கூறினாலும் அவனுக்கு புரியாது போதை தெளிந்தபின்தான் புரியும்
அவர்கள் போதையில் இருப்பவர்கள் (ஆத்திகர்கள் )
நாம் சொல்வதால் அவர்களுக்கு புரியபோவதில்லை
அவர்கள் இல்லாத ஒன்றை இருக்கு என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள்


by
சுந்தர்
www.kalingaimoorthi.blogspot.com

பொன்னியின் செல்வன் 7 January 2011 at 13:11  

Few References:

http://viduthalai.in/new/viduthalai-magazine/india/91-new-delhi/759-2011-01-06-09-42-40

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்