Showing posts with label அரசியல்வாதி. Show all posts
Showing posts with label அரசியல்வாதி. Show all posts

சால்வையால் சோர்ந்தவன்

லோ! என்ன அப்டி பாக்கறீங்க? நாந்தான் அரசியல்வாதியோட மனசாட்சி பேசறேன். எசமான் தூங்கிட்டு இருக்கார்.

சால்வை போர்த்திக்கொண்டும் போர்த்தப்பட்டுக் கொண்டும் இருக்கும் சாட்சாத் சால்வை அரசியல்வாதியேதான் பேசறேன். அரசியல்வாதின்னா அரசியல்வாதியில்ல; அவரோட மனசாட்சி தான் பேசறேன்.

எங்க போனாலும், எந்த மேடைக்குப் போனாலும், எந்த நிகழ்சிக்குப் போனாலும், கூடவே சால்வை தூக்கிக்கிட்டு போக வேண்டியிருக்கு; இல்லைன்னா வரும்போது சால்வையோட வர வேண்டியிருக்கு.

ஏதாவது நல்ல சில்க்ஸ் கடை இருந்தா சொல்லுங்கள். அதுவும், குறைவான விலையில் சால்வை வாங்கவும்; விழாவில் பெற்ற சால்வையை, நிறைவான விலையில் விற்கவும்.

என்னது? அந்த சில்க்ஸ் எம்போரியத்தையே நாந்தான் தொறந்து வெக்கனுமா? அடடே! எனக்கு இந்த புகழ் எல்லாம் பிடிக்காது; அத மொதல்லயே சொல்லிடுங்க. ஏதோ நீங்க வற்புறுத்தி கேக்கறதால ஒத்துக்கறேன். அப்புறம் சிம்பிளா கேபிள் டி.வி லைவ் டெலிகாஸ்ட் பண்ணினால் போதும். எனக்கு இந்த விளம்பரம் எல்லாம் அலர்ஜி, அதனாலதான் பாருங்க.

நீங்க நெனப்பீங்க, இவரு வந்து கடையை தொறந்துவெச்சா பணம் தரனுமா?-ன்னு. அதப்பத்தி நீங்க கவலையே படாதீங்க; இந்த மாதிரி, சீப்பா பணம் வாங்குற புத்தியெல்லாம் எனக்கில்ல. வேணுமுன்னா கர்ச்சீப்ல நாலு கொடுங்க; அதுவும் உங்க மன திருப்திக்காகத்தான். ஆங்....... இத சொல்ல மறந்துட்டேனே! கர்ச்சீப்-ன உடனே ஒரு ஜானுக்கு-ஒரு ஜான் அளவு சைஸ்னு சீப்பா எட போட்றாதீங்க; ஒரு அடிக்கு-ஒரு அடி சைஸ் கர்சீப். பாருங்க, மக்கள் பணிக்காக ஓயாமல் வேர்வை சிந்தி உழைக்கிறோம்ல; அதான்! அதுலயும் தங்க ஜரிகை வெச்ச கர்ச்சீப்னா ரொம்ப ஷேமம்! இதுல ஒரு அடியா-ரெண்டு அடியாங்குறதா முக்கியம்? நீங்க நல்ல படியா ஜவுளி கடை நடத்தனும்; அதானே முக்கியம்.

பொங்கல் வேற வருதேன்னு, என்னைய உங்கள் ஜவுளிக்கடையிலேயே இலவசமா துணி எடுத்துக்க சொல்லி வற்புறுத்தாதீங்க. ஏன்னா இலவசங்களை கடுமையாக எதிர்ப்பவன் நான். அப்புறம் என் டிரைவர் பொங்கல் சமயத்தில் உங்களைப் பார்க்க வருவார். மேற்படி விஷயங்களை டிரைவர்கிட்ட பேசிக்கங்க. டிரைவர் குடும்பமும் சின்னதுதான்; அதுனால உங்களுக்கும் செலவு ஒன்னும் அதிகம் இருக்காது. மேற்படி, கவணிக்க வேண்டியதை கவனிச்சு விட்றுங்க.

இந்த சால்வை போத்தறவங்களும் சரியான அளவான சால்வை போத்தறாங்களான்னா அதுவும் இல்லை. பல நேரத்துல அவங்க போத்தற சால்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு, அவங்க போத்தற சால்வை பெரிசுதான்னு காட்ட நான் படுற கஷ்டம் எனக்குல்ல தெரியும்.இந்த லட்சனத்தில் போட்டோ வேற;என்னமோ நான் மயில் மாதிரியும், அவரு பேகன் மாதிரியும்!

சரிங்க, சால்வை போத்தறதுன்னு முடிவு பன்னிட்டீங்க; அதை மடிச்சு வச்சபடியே அப்படியே கொடுக்க வேண்டியது தானே! அதையும் செய்ய மாட்டீங்க. மடிச்சு வெச்ச சால்வையை பக்கத்தில கொண்டு வந்து ஆசை காட்டிட்டு, சர்ருன்னு மயில் தோகை விரிக்கிற கணக்கா விரிச்சு போத்தி விட்டுடுறீங்க. இந்த மயில் தோகையை மறுபடியும் மடிச்சு, கவருக்குள்ளேயே திரும்ப வெச்சு, புது சால்வை மாதிரியே ஜவுளிக்கடையில விக்க நாயா பேயா அலையறது நாந்தானே. அந்த வலி, காசு கொடுத்து சால்வை வாங்கிய உமக்கு எங்கப் புரிய போது?

இது கூட சரிங்க, மயில் தோகையை கூட மண்ணிச்சிரலாம். ஆனாலும், பக்கத்தில வந்திட்டு, இந்த விரிச்ச சால்வையை கையில வெச்சுகிட்டு, உன் பேர மைக்ல சொல்ற வரைக்கும் காத்திருந்து, உன் பேர சொல்லி 'இன்னார் இன்னார் இப்போது இன்னாருக்கு பொன்னாடை அணிவிப்பார்' என்று சொல்லியவுடந்தான், கடமை உணர்ச்சியோட சால்வை போடுற உன்னை என்னய்யா செய்யறது. ஆமா, இந்த பொன்னாடை-யில இருக்க 'பொன்'-னுக்கு அர்த்தம் தெரியுமாய்யா உனக்கெல்லாம்?

அது என்னய்யா கலர் இது? உனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தியா? உனக்கு வேலையாகனும்னா, எனக்கு பிடிச்ச கலர்தான நீ வாங்கியாரனும்! எனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தாலாச்சும் நான் யூஸ் பன்னுவேன். உனக்கு புடிச்ச கலரா வாங்கியாந்தா ஜவுளி கடைக்குத்தான் போகும்.

இதுல சில அதிகப்பிரசங்கிகள் வேறு. அவங்கள்ளாம் செய்தித்தாள் படிக்கிறாங்களா? இல்ல வேனுமுன்னே அவமானப் படுத்தறாங்களா?-ன்னு தெரியல. பின்ன என்னங்க? போன கட்சியில இருந்து இந்த கட்சிக்கு வந்தப்புறமும், போன கட்சி கலர் போட்ட சால்வையோ துண்டோ போட்டா, இருக்கிற கட்சியோட தலைமை என்ன நினைக்கும்? தலைமை என்ன நினைக்குமோ ஏது நினைக்குமோ-ன்னு, தலைமைக்கு பிடித்த கலரில் சால்வை வாங்கிட்டு போய் பொன்னாடையைப் போர்த்தி; ஒரு போட்டோவாவது எடுத்துக் கொண்டு, சால்வையை மடித்தும் கொடுத்து விட்டு வந்தால்தான், உள்கட்சி அரசியலில் இருந்து தப்பிக்க முடியும்.

அரசியல்ல இந்த சால்வையெல்லாம் சகஜமப்பா! பொது வாழ்க்கைன்னு வந்துட்டா பலப் பிரச்சினைகளையும் போர்வையாவே போத்திகிட்டு படுக்குறவங்க நாங்க!

ஐயோ! எசமான் எந்திரிக்றாருன்னு நினைக்கிறேன்! நான் அவருக்குள்ள போறேன். அவரு என்ன தேடமாட்டாருதான். ஆனா எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குல்ல!

பொன்னியின் செல்வன்

பிச்சை ஒழியுமா?


லகமே ஒரு நாடக மேடை! இதில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில், சதா சர்வ காலமும் கையில் பாத்திரம் ஏந்தும் கதாபாத்திரம் தான், பிச்சைக்காரர்கள் எனும் கதாபாத்திரம்; மக்கள் போடும் எந்த பதார்த்ததையும், பாத்திரத்தில் ஏந்தி பிழைப்பவர் தான், இந்த பிச்சைக்காரர்கள். பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியவில்லை என்பது இன்றைய எதார்த்தம் ஆகி விட்டது. ஆனாலும் அவர்களை பழிக்கத்தான் செய்கிறோம்.


இன்றைய போலி அரசியல்வாதிகள் பெறும் அன்பளிப்பை(!) புறந்தள்ளுவோம். அந்த அன்பளிப்பும்(!) பிச்சை பெறும் வகையை சேர்ந்தது!


?ui=2&view=att&th=124ec6bb8a88b736&attid=0.1&disp=attd&realattid=ii_124ec6bb8a88b736&zw[இப்படி, அரசியல்வாதிகளை குறிப்பிடும் போது ‘போலி அரசியல்வாதி’ என்று எழுதிவிடுவது ஒரு சேஃப்டி. பின்னால யாராச்சும் பிரச்சினை பன்னினால், “நாங்கள் போலி அரசியல்வாதியைப் பற்றி அல்லவா கூறினோம்; நீங்கள்…............?” என்று கூறி வாயடைத்துவிடலாம். ]




இராணிய கவிதை ஒன்று இருக்கிறதாம்; அதாவது, ஒரு காதலன் காதலியை பார்த்து, “ஏ… காதலியே! உன் இதயத்தை என்னிடம் கொடு. அதற்கு பரிசாக இந்த சாமர்கண்ட் நகரையே தருகிறேன்!”, என்கிறானாம். என்ன ஆச்சரியம் என்றால், அந்த சாமர்கண்ட் நகரமோ அந்த காதலனுடையது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? அதில் இருக்கும் காதல் ரசம், சாம்பார் இவற்றை விட்டுவிட்டுப் பார்த்தால் தெரிவது என்னவெனில், நம்முடையதாக இல்லாவிட்டாலும் தானம் செய்வதாக எளிதாகக் கூறிவிடலாம்! இப்படித்தான் ஆங்கிலேயர்கள், இந்தியாவை இந்தியர்களிடமே கொடுத்தார்களோ என்னவோ!


பிச்சைக்காரர்கள் வார்த்தையில் வித்தை புரிவர். அவர்களும் போலி அரசியல் வாதியின் வார்த்தை விளையாட்டுகளைப் பல நேரங்களில் புரிவார்கள். பின்னே என்னங்க, பார்க்கிறவரை எல்லாம் “சாமி…” என்கிறார். பத்து பைசா என்றால் – “தரும பிரபு!” ஒரு ரூபாய் என்றால் – “தரும மஹா பிரபு!”


பிச்சைப் எடுப்பது கேவலம் எனில் பிச்சைப் போடுவது அதை விட கேவலம். பிச்சையையும் உதவியையும் ஒன்று எனக் கருதக் கூடாது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கொள்கை இதில் ஒரு நல்ல கொள்கை. அதாவது உதவி என்பது, உணவுக்கும், மருத்துவத்திற்கும், கல்விக்கும் ஆக இருக்க வேண்டும் என்பது தான் அது. இதை வரிசை படுத்தி இருப்பதும் சிறப்பாக இருக்கிறது.


பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியுமா? அதாவது, பிச்சைக்காரர்கள் என்றால் பிச்சைக்காரர்களை அல்ல; அவர்கள் எடுக்கும் பிச்சை எனும் செயலை. கொடுப்பவர் இருப்பதால் தான் பிச்சை எடுப்பவர்களும் இருக்கிறார்கள். பத்து பைசா பிச்சை போட்டு விட்டு, ஐடி ரிடர்ன்ஸ் 80CC-ல் டிடக்ஷன் கிடைக்குமா என்று யோசிப்போர் ‘தரும பிரபு’-வாகவே சில நொடிகள் பூஜிக்கப்படுவதில் குறையொன்றுமில்லை.


பிச்சைப் இடுகிறவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை, ‘நாம் ஒருவரின் சுய மரியாதையை குழி தோன்டிப் புதைக்கிறோம்; ஒருவனை சோம்பேறி ஆக்குகிறோம்; சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறோம்’, என்று. உழைக்காத ஒருவனுக்கு பிச்சைப் போடுவதால், பிச்சைப் பெற்றவரின் போலி வாழ்த்துரையால் புண்ணியம் வருகிறதோ என்னமோ தெரியாது, ஆனால் பிச்சை இட்டதால் பாவம் வந்து சேரும்.


இரண்டு கைகளும், கால்களும், கண்களும் சரியாய் இருப்போருக்கும்; குறிப்பாய், சிறுவனாய் இருப்போருக்கு பிச்சைப் போடுவதை எப்படி ஏற்க முடியும்? கற்கை நன்றே … கற்கை நன்றே …. பிச்சை புகினும் கற்கை நன்றே … என்று கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று இருக்கையில்; பிச்சை எடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டுள்ள சிறாரை ஊக்குவிப்பது தவறுதானே?


சில நேரங்களில் பிச்சை கேட்பவர், நமக்கு தெரிந்த; நமக்கு தெரிந்து மறைந்த நபர் போல இருக்கக் கூடும். அந்த சமயங்களில் மட்டும் கை தானாகவே பர்ஸை நோக்கி பொகிறதே! அது ஏனோ தேரியவில்லை! அதை கேள்வி நியாயங்களுக்கு உட்படுத்துவது கடினம் தான்.


பிச்சைக் காரர்களுக்கு குறும்பும் அதிகம். பாருங்கள்! பிச்சைக் காரன் ஒருவன், ஒரு வீட்டில் சோறு வாங்கி கொண்டு விட்டு, “அம்மா…. சோறு ஆக்கின கைக்கு, தங்கத்திலேயே நல்ல வாட்ச் வங்கி போடுங்கம்மா” என்று கூறி சமையல் செய்தவருக்கு (வீட்டுக்காரருக்கு!) பாராட்டு மழை பொழிந்து செல்கிறார்.


“அமெரிக்காகாரனுக்கு ஏதாச்சும் பொறுப்பு இருக்கா? இந்த recession  வந்தாலும் வந்திச்சு. ‘தருமபிரபு’ எல்லாம் ‘கருமிபிரபு’வால்ல ஆயிட்டான். நல்ல வேளை இது வரை சேத்த பணத்தை எல்லாம் எந்த பேங்க்லயும் போடாததால திவாலாகாம தப்பிச்சோம்”. இப்படியாக, குறும்பாயும் உலகத்தை நோக்குகிறார்கள்.


சிறு துளி பெரு வெள்ளம்… புரியவில்லையா? பத்து பைசா, கால் ரூபா இப்படி இத சேர்த்தாலும் கோடி வரும்ங்க. மும்பைல இருக்க பிச்சைக்காரர்களின் வருட கலக்ஷன் 180 கோடியாம். இத எங்க போய் சொல்றது?


இப்போது எல்லாம் பிச்சைக்காரர்கள் மாநகரங்களை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்து விட்டனர். எல்லாம் வருமான நோக்கம் தான். பிச்சைக்காரர்களுக்கும் ஏரியா இருக்கிறது. அது கூகில் மேப்பை காட்டிலும் துள்ளியமானதும் கூட. சமீபத்தில், டெல்லியில் பிச்சைக்காரர்களை கைது செய்து நகரத்தை விட்டு அகற்றும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. சில மாநிலங்களில் பிச்சை எடுப்பது குற்றம் என்று கூட சட்டம் இருக்கிறது. டெல்லியிலும் கூட அப்படியே. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. டெல்லி உயர் நீதி மன்றம், ‘வறுமை ஒரு குற்றம் இல்லை; பிச்சைக்காரர்கள் நகரை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டியது இல்லை; அப்படி செய்தால், அது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம்’, என்று குறிப்பிட்டுள்ளது. 

ஆம்! ஒழிக்க வேண்டியது பிச்சைக்காரர்களை அல்ல பிச்சை எனும் செயலை! 


ஹரீஷ்



நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்