Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

தேர்தல் முடிவுகள் !




சூரியன் மீண்டும் உதித்தது. கை சூரிய நமஸ்காரம் செய்தது.
தாமரை பூ வாடியது. இலைகள் சுருங்கியது.
வெகு தூரத்தில் மெல்லிய முரசு சத்தம் கேட்கின்றது.
வெயிலின் கொடுமையால் நெற் கதிர் அறுக்க அரிவாளுக்கு வேலை இல்லை.
இது மாம்பழ சீசன், இருந்தும் மாம்பழம் ஒன்று கூட கிடைக்க வில்லை.

Disclaimer : இதில் உள்ள கருத்துக்கள் உயிருடன் உள்ள எவரையோ, அல்லது கடற்கரையில் சமாதியாய் இருப்பவரையோ , காலால் நடப்பவரையோ, சக்கர நாற்காலியில் நடப்பவரையோ, திறந்த வேனில் வலம் வருபவரையோ, ஹெலிகாப்டேரில் பறப்பவரையோ, ரதத்தில் வலம் வருபவரையோ நேரிடையாக குறிப்பிடப் படுவன அல்ல. முக்கியமாக மறைமுகமாக குறிப்பிடப் படுவன அல்ல.
வேண்டுமானால் வலது புறமாகவோ இடது புறமாகவோ குறிப்பிட பட்டு இருக்கலாம்.

இந்த கருத்துக்கள் எல்லாம் கற்பனையே. சில நேரங்களில் மட்டும் வாய் தவறி உண்மைகள் பொதிந்து இருக்கும்.

ஹரீஷ்

காந்தி சிரிக்கின்றார் கவருக்குள்ளே ....



தமிழ் மக்களே ...

விழித்து கொள்ளுங்கள் வந்து விட்டது வேலை ...
வேலை உங்கள் மதியில் உள்ளது ..... .. செயல் உங்கள் விரலில் உள்ளது ....

ஆள் கூட்டி மாஸ் காட்டலாம் தேர்தல் கூட்டத்தில் ....
ஆனாலும் நம் ஆள் காட்டி விரலில் தான் உள்ளது அவர்கள் ஐந்து ஆண்டு ஆயுட் காலம் ...

வந்தே விட்டது ஐந்து வருடம் முன் நாம் செய்த தவறுக்கான பிராயசித்தம் ..

இதோ தினமும் வருகின்றார்கள் .... நம் நாளைய பாரதத்தை புரட்டி போட போகின்றார்களாம் ...
வார்த்தை அவர்களுக்கு என்றுமே தடை இல்லை ......
வார்த்தைகளில் வெல்லம் வடியும் ..... வெற்றி பெற்றாலோ வேதனை தான் மிச்சம் ...

இன்று சொல்லுவார்கள் நான் உங்களின் தொண்டன் என்று வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து .......
நாளை, நாம் அவரை கேவலம் கேள்வி கூட கேட்க கூடாது என்றும் சொல்லுவார் ...
காரணம் என்ன வெனில் ...
அவர்களும் மக்கள் மன்றத்தில் கேள்வியே கேட்க மாட்டார்களாம் ...

அடுத்த நான்கு வருடத்தில் இவர்களுக்கு மன்னர் ஆட்சி தான் நினைவில் இருக்கும் ...
ஆமாம் ஆமாம்.... இருக்காதா ... .. நாம் தான் amnesia நோயாளிகள் ஆயிற்றே ....
நம் தொகுதியின் தேர்ந்து எடுக்க பட்ட வேட்பாளர் யார் என்று நமக்கு எள்ளளவும் மீண்டும் தெரிந்து கொள்ள கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் அடுத்த ஐந்து வருடத்திற்கு நடந்து கொள்ளுவார் ....
மீண்டும் நாம் ஐந்து வருடம் கழித்து தான் பிராயச்சித்தம் தேட வேண்டும் ....

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் இவ்வாறும்
உடையான் அரசருள் ஏறு !!!

என்று அய்யன் வள்ளுவன் கூறியதை அப்படியே தவறாக எடுத்து கொண்டுள்ளார்கள் போலும்
படை - அடியாட் படை
குடி - டாஸ்மாக் கடை
கூழ் - பிரியாணி பொட்டலம்
எனவாக இவர்கள் ஆட்சி செய்ய நம் ஆட் காட்டி விரலே சென்ற முறை சாட்சி சொல்லியது ...

இவர்கள் நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று என்று பேசுபவர்கள் இல்லை..
ஆம்.. கடந்த ஐம்பது வருடமாக ஒரே வாக்குறுதி தானே கொடுக்கின்றனர் ...

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற போகின்றார்களாம் கவரில் வைத்த பணத்தை கொடுத்த படியே கூறுகின்றார்கள் ..
காந்தி சிரிக்கின்றார் கவருக்குள்ளே ....

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்