தங்கம் ஆ-தங்கம்!


ங்கம் என்றாலே 'ஆ'வென்று வாய் பிளப்பவறாய்த்தான் இன்றளவிலும் பலரும் இருக்கின்றனர். இதில் ஆண்-பெண் பேதமேதும் இல்லை. பெண்களுக்கோ தங்கத்தின் மேல் சற்றே அதீத ஆர்வம். அழகுக்கு அழகு சேர்த்தது போலுமாயிற்று. பொருளுக்கு பொருள் சேர்த்தது போலுமாயிற்று. இவற்றையெல்லாம் விட, பெண்கள் சிலருக்கு இருக்கும் மற்றொரு ஆசை........ ஆசையா ? பேராசை........ பேராசையா ? ம்ஹூம்.. இல்லை.... பொறாமை! அந்த பொறாமை என்னவென்றால் தாங்கள் அணிந்திருக்கும் பொன் நகையைப் பார்த்து யாவரும் பல்லிளிக்கனும் பிரமிப்படைய வேண்டும் என்பதுதான். இப்படியாக, பிற பெண்களை தங்கள் மேல் பொறாமை பட வைப்பதில்தான் தங்கம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.

மஞ்சள் வண்ணம் மின்னும் பளபளப்பு; பார் போற்றும் வைபவம் எனவாக வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்திய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அந்தத் திருமணத்தை நடத்தியபோது வாங்கிய சம்பளம் ரூ.1. இப்போதோ நீதிமன்றப் படிக்கட்டுகளில் சொத்துக் குவிப்பு வழக்குக்காக அலைந்து கொண்டிருக்கிறார். இது எதைக் குறிப்பிடுகிறது என்றால், மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

இன்றைய தேதியில் வரதட்சனை என்பது கௌரவமாகப் போய்விட்டது. யாருக்கு? என்றால், மணமகன் வீட்டாருக்கு மற்றும் மணப்பெண் வீட்டாருக்கு என இரு வீட்டாருக்கும்தான். நாங்கள் 'இவ்வளவு போட்டோம்', 'இவ்வளவு செஞ்சோம்' 'இவ்வளவு கேட்டோம்' 'அவுங்க எவ்வளவு செஞ்சாங்க' 'மார்க்கெட் நிலவரம் தெரியுமா?' என் ஜம்பம் அடிப்பதற்குத்தான். 'மார்க்கெட் நிலவரம்' என்றவுடன் இன்றைய தேதியில் தங்கம் கிராம் எவ்வளவு என்ற நிலவரம் இல்லை; இன்றைய தேதியில் எவ்வளவு தங்கம் போடுகிறார்கள் சமூகத்தில் என்ற 'மார்க்கெட் நிலவரம்'. இதிலும் கெட்டிக்கார மணமகள்கள் இதுதான் சமயம் என்று, சமயோசிதமாக பிறந்த வீட்டில் இருந்து இருப்பதை உருவிக்கொண்டு, புகுந்த வீட்டிற்கு பொருள் சேர்க்கிறார்கள்.

இது போகட்டும் என்று, பொன் அல்லது வரதட்சனைப் பெறாத மணமகன் யாராவது இருக்கிறாரா என்று தேடிப்பார்த்ததில் இதுவரை யாரும் கண்ணுக்கு அகப்படவில்லை. ஆண்கள் கூற்று என்னவென்றால் "நாமாக கேட்பதில்லை; கேட்காமல் வருவதைத் தடுப்பதில்லை " என்று கலைஞர் வகையறா கன்ஃபுயூஷன் டையலாகை பெருமிதமாய் கூறுவதாய் எண்ணி, சுயநலமாய் தப்பித்துக்கொள்ளுகிறார்கள்.

[இவ்வளவு வரட்டு பேச்சு பேசுறீரே.. நீர் எப்படிங்கானும்..]

தங்கத்தின் தரம், இந்தியாவை விட வெளிநாடுகளான சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் சிறப்பாக இருப்பதாக வீட்டில் கூறுகிறார்கள். அதெல்லாம் நமக்கெப்படிங்கானும் தெரியும். அதுவும், அந்த நாடுகளில் தங்க மார்கெட்கள் மிகப் பிரசித்தம். வளைகுடாவில் அதனை கோல்ட் சோக் (Gold Souk) என்று கூறுகிறார்கள்.

இந்தியா வந்த போது வீட்டில், "கோல்ட் சோக்-கில்(Gold Souq) தங்கம் நல்ல சூப்பரா குவாலிட்டியா இருக்குமே! அங்கே எல்லாம் போயிருக்கியா?" என்று கேட்டார்கள்.

நமக்கோ நாரதர் நாக்கில் நாட்டியம் ஆடுபவர். "ஒ! போயிருக்கேனே.. பயங்கர நெரிசலான ஏரியா.. எப்பம் பார்த்தாலும் கூட்டம் அலைமோதும்.. மக்கள் பரபரப்பாக இருப்பார்கள்... " என்றோம்; மேலும் தொடர்ந்து, "ஆனா குவாலிட்டி பத்தியெல்லாம் எனக்கு தெரியாது" என்றோம். மேலும், "அங்க கோல்ட் சோக்-ல நடந்து போனப்ப, கடைத்தெரு வழியா போகும்போது கையில ஃபோட்டோ வெச்சுகிட்டு, 'இந்தாங்க பாருங்க; இந்தோ பாருங்க; இது ஓகே-வா?' அப்டின்னு காட்டுவாங்க!" என்றேன்.

வீட்டிலே ஆச்சரியமாய், "ஓ! அப்படியா! நகை டிசைனை மார்க்கெட் பன்ன இப்படி கடைவாசலில் நின்னு ஃபோட்டோவைக் காட்டுறாங்களா?" என்று அப்பாவியாய் கேட்கிறார்கள்.

நாமோ அமைதியாய், "கடை வாசல்ல இல்லை" என்றோம்.

வீட்டில் சற்றே குழப்ப ரேகையுடன், "வேற எங்க?" என்கிறார்கள்.

நாமோ, முன்பு இருந்த அதே பொறுமையுடன், "தங்க மார்க்கெட் இருக்குற ஏரியாவில் உள்ள லாட்ஜ் வாசலில்" என்றோம்.

வீட்டிலோ, குழப்ப ரேகை போய், சந்தேகரேகைத் துளிர்விட, "என்ன ஃபோட்டோ?" என்கிறார்கள்.

நாமோ, மீண்டும் பொறுமையுடன், "பெண்கள் ஃபோட்டோ" என்றோம்.

இதைக் கூறியவுடனேயே, நாரதர் எழுந்து நின்று நாட்டியம் ஆடத்தயாராகி விட்டார் நாக்கில். எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்டதைப் போல், நாமோ, "தங்கம் என்றால் எப்படி வாங்க வேண்டும். உரசி பார்த்துதான் வாங்க வேண்டுமோ?" என்று அதே பொறுமையோடும் பவ்யத்தோடும் கேட்க, நாரதர் நாட்டியத்தின் உச்சியில் இருந்தார் என்றால் பாருங்களேன்!

ஏனோ தெரியவில்லை, வீட்டில் இப்போதெல்லாம் தங்கத்தின் தரம் வெளிநாட்டைவிட இந்தியாவிலேயே சிறப்பாக இருப்பதாகக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், "கோல்ட் சோக்" எல்லாம் போய் அலையாதே என்றும் கரிசனமாய்க் கூறுகிறார்கள். ஏன் சார்! எங்கே, தங்கத்தில் குவாலிட்டி(Quality) பாக்க போய் கடைசியில் கில்டியாக(Guilty) முடிந்துவிடும் என்ற கரிசனமோ!

சரி அத விடுங்க சார்!

கிளாஸ்-மேட் (CLASS Mate) எல்லாம் க்ளாஸ்-மேட்(GLASS Mate) ஆகின்ற தருனத்தில் தங்கபாட்டில் என்றால் அதன் அர்த்தமே வேறு. என்ன அர்த்தமா? தங்கத்தின் கெமிக்கல் சிம்பல்-AU, கெமிக்கல் நேம்-AURUM. வார இறுதியில் வகுப்பு நண்பர்கள் குழுமும் போது, தங்க பாட்டில் என்றால் அதன் அர்த்தமே வேறு! அதாவது, AURUM என்ற வார்த்தையின் கடைசி மூன்று எழுத்தான 'RUM' என்ற வார்த்தையைப் பார்த்தாலே புரிந்து போகும். முதல் இரண்டெழுத்து 'தங்கத்தை' குறிக்க, கடைசி மூன்றெழுத்து 'பானத்தை' குறிக்க, அந்த வேளையில், கிளாஸ்-மேட்ஸ் (CLASS Mate) எல்லாம் ஒன்ற சேர்ந்து க்லாஸ்-மேட்ஸ்(GLASS Mate) ஆகின்ற தருனத்தில் தங்கபாட்டில் என்றால் அது சோமபானத்தைக் குறிக்கும்.


சுத்தமான தங்கம் என்பது 24 கேரட். அந்த சுத்த தங்கத்தை வைத்து தங்கக்கட்டி மட்டும்தான் செய்யமுடியும்; ஆபரணங்கள் செய்ய முடியாது. சூடான சுத்தமான தங்கம் எடுத்து சற்று காப்பர் மற்றும் சில உலோகங்களைச் சற்றே கிண்டி எடுத்து, ஆறவைத்து எடுத்தால் 22 கேரட் தங்கம் கிடைக்கும். கூடவே தங்க நகைகளும் கிடைக்கும். உபரியாய் 'அசூயை' கிடைக்கும்.

அந்த சுத்த 24 கேரட் தங்கத்தில் சற்று மிகுதியாகவே காப்பர் மற்றும் சில உலோகங்களைக் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்தால் பற்பல டிசைனில் வகை வகையாய் நகைகள் கிடைக்கும். விலையோ பர்ஸை கடிக்கும்.

இவற்றைத் தவிர, தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடும் கூட என்கிறார்கள். தங்கம் அதன் சுரங்கத்தில் கட்டிகட்டியாய் இருக்காது, ச்சும்மா போய் வெட்டி எடுத்துக் கொண்டு வந்துவிட. தங்கம் பிரித்தெடுக்கப் படுவதற்கு முன்னால் பல்வேறுபட்ட உழைப்பு இருக்கிறது. பல ஆயிரம் கிலோ தங்கத் தாது வெட்டி எடுத்து வந்தால்தான் சில கிராம் தங்கம் கிடைக்கும். இதைப்போலவே, ஒரு மனிதனிடம் ஒரு சிறிய சிறந்த நற்பன்பைப் பார்க்கும்முன் பல ஆயிரம் தூசுகளைத் தான்டித்தான் பார்க்க இயலும்.


எதில் எல்லாம் சிறப்பு இருக்கிறதோ, அதிலெல்லாம் போலி என்ற ஒன்று உருவாகும் என்ற உலக நியதிக்கு இனங்க, தங்கநகைகள் போல தோற்றம் இருக்கின்ற கவரிங் நகைகளும் பிரசித்திதான். அது சரி! இது என்ன கவரிங் நகை என்று வினவினால். கவரிங் நகையில் இருக்கிற ஜொலிப்பால், தங்கம் போல் காட்டி ஆண்களை 'கவர்' பண்ணத்தான் என்கிறார்கள் கூலாக. ஓ! அதனால் தான் இது 'கவரிங்' நகை போலும்!

திருப்பதி கோவிலின் உட்பிரகாரத்தில் தங்கத்தகடுகள் பதிக்கப் போகிறார்களாம். எல்லாம் மக்கள் காணிக்கையாக்கிய பணம். செய்யட்டுமே.. ஷேமமாய் செய்யட்டுமே .. அப்படியே கோவிலுக்கு வர்ற பக்தர்களுக்கு, ஒரு கால் கிராம் தங்கக் காசு கொடுத்தால்... கொடுத்தவனுக்கே திரும்பவும் கொடுக்கப்பட்டது என்ற திருப்தியும் ஏற்படும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் கூடுவார்கள். பிசினசும் சூடு பறக்கும். இதுதான் சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது.

தந்தை பெரியார் அவர்கள், பெண்களின் தங்க நகை அலங்கார மோகத்தைப் பற்றி மிக சிறப்பாக இவ்வாறாக குறிப்பிடுகிறார்கள்:
"அலங்கரிப்பு இல்லாத பெண்களைப் பார்த்தால்தான் குணத்தை மதிப்பார்கள். மதிக்கவும், நேரமும் புத்தியும் போகும். அலங்கரித்த பெண்ணைப் பார்த்தால் உடலையும் உருவத்தையும் மதித்துத் தப்பான உணர்ச்சியைத்தான் பெறுவார்கள். சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதிலும் பார்வைக்கு வெறுப்பு, அசிங்கம் இல்லாமல் பசுந்தாய் (Neat-டாய்) இருக்க வேண்டும் என்பதிலும் நமக்கு எள்ளளவும் அக்ஷேபனை இல்லை." மேலும், "பெரிதும் இந்த மாதிரி அலங்காரம் எதற்குப் பயன்படுகிறது எப்படிப்பட்டவர்களுக்கு இது தேவை இருக்கிறது என்று பார்த்தால், மிகவும் அதிருப்தியான பதில்தான் காணப்படும். ஏனெனில் நல்ல அறிவும், மானமும், நாகரிகமும் உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களைப் பார்த்து 'இந்தப் பெண் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருக்கிறாள். அழகுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறாள். இவள் மிகவும் சிங்காரமாக இருக்கிறாள்' என்று சொல்லுவதற்கே இடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்".

பெரியார் சொன்னால் சரிதான்!

இப்படிப் பட்ட பெண்களைப் பார்ப்பது எப்போது? அதுதான் ஆ-தங்கம்!


-பொன்னியின் செல்வன்-

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்