ராம் செத்தாராம்


ற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு.
கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கக் கூடும்; தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்று.
அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவி பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் சாதியாம் :(
தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் சாதியாம் :(
தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் சாதியாம் :(
காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் சாதியாம் :(
இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றானாம். எப்படி இருக்கிறது நியாயம்? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் சாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் சாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான். எப்போது என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்!

நன்றாக கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்?

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறோம் என்றால்:
- வர்ணாசிரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- சாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத் தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும்.

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம (க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விகாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம (க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதா பாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?
[ அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist இடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]

ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துக் கொண்டுதான், இன்றைய தேசிய கட்சிகள் காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது. அது போல, 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.

[ எடக்கு மடக்கா கேட்பதாய் எண்ணி, 'எப்போதுமே தல விழுந்தால்?' என்று கேட்டால்; 'அந்த நாணயம், அஜித் ரசிகருடைய நாணயம்' என்றுதான் சொல்ல இயலும். ]

அல்லது, புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது Accused ஆச்சாரியார் சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :)

வெளிநாட்டுகாரனோ கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம (க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடிப்பது காவித் தீவிரவாதம் தானே.

பகுத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும் தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியாதே! இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, சாதி, மூட பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக் கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், சாதி, மூட பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார். 

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

ராம் செத்தாராம்

இந்து மதத்தின் அபத்தம்



ந்து மதத்தின் மீது நமக்கு என்ன தனிப்பட்ட வெருப்பா? இல்லை.
பின் ஏன் கானும் இந்து மதத்தைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறீர்? என்றால். இந்து மதத்தில், மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பல மனிதஉரிமை மீறல்கள் உள்ளதால்தான். இந்தக் கணத்தில், இதை உங்களால் வாசிக்க முடிகிறது என்றால், அது இந்து மதத்தினால் விளைந்தது இல்லை. இதை வாசித்து இந்த வார்த்தையை உங்களால் சிந்திக்க முடிகிறது என்றால், அதுவும் இந்து மதத்தினால் வந்த விளைவு இல்லை. 

தந்தை பெரியாரால் வந்தது; கர்ம வீரர் காமராசரால் வந்தது; 'நன்றி மறப்பது நன்றன்று'.

மேலான்மையில், 5 WHY principle என்ற ஒன்று இருக்கிறது. அதாவது, ஒரு தவறின் மூலக்காரணம் அறிய வேண்டுமென்றால், 'ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?' என்று ஐந்து முறை, தவறிலிருந்து கேட்டு கொண்டே போனால், முடிவில் மூலக்காரணம் அறிய முடியும்.

இந்த 5 WHY principle-ஐ கல்வியில் செலுத்தி பார்ப்போமேயானால்;

- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- இல்லை என்றால், ஏன்?
- பள்ளிக்கூடம் இல்லை. ஏன் பள்ளிக்கூடம் இல்லை?
- கல்வி மறுக்கப்பட்டது. ஏன் கல்வி மறுக்கப்பட்டது?
- இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம கொள்கைப் படி,
  கற்பனையான முதல் சாதியினரைத் தவிர மற்றவருக்கு கல்வி மறுக்கப்பட்டது.


- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- ஆம். பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றார்கள்.
- அப்படியானால் உங்கள் மூதாதையர் படித்திருக்கிறார்களா?
- இல்லை என்றால், ஏன்?
- பள்ளிக்கூடம் இல்லை. ஏன்?
- கல்வி மறுக்கப்பட்டது. ஏன்?
- இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம கொள்கைப் படி,
  கற்பனையான முதல் சாதியினரைத் தவிர மற்றவருக்கு கல்வி மறுக்கப்பட்டது.


- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- ஆம். பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றார்கள்.
- அப்படியானால் உங்கள் மூதாதையர் படித்திருக்கிறார்களா?
- ஆம். மூதாதையர் படித்திருக்கிறார்கள்.
- நீர் பார்ப்பணரா?

இது ஏதோ, பார்ப்பணரை துவேஷிக்கும் எண்ணத்தினால் கூறவில்லை. இங்கே கல்வி என்பது 'பொது'. ஆனாலும், காலம் காலமாக கல்வி ஒரு சாராருக்கு மட்டும் Reserve செய்ய்யப்பட்டதன் காரணம் என்ன? ஒரு சாரார் கற்பனையான உசத்தி; மற்றார் கற்பனையான கீழ், என்ற காரணத்தினால்தான்.

இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம தர்மம், அப்படி என்னதான் சொல்லித் தொலைகிறது என்று பார்த்தால், பால்வீதி(Milky Way Galaxy) புழுகு தாண்டி, அண்டசராசர(Universe) புழுகு புழுகுகிறது!
இப்பூவுலகில் பிறக்கும் மனிதர்கள் நால்வகைப் படுவராம்! குணத்தால், உழைப்பால், திறமையால், அறிவால், ஆற்றலால அல்லாமல்; Advance Booking எனும் விதமாக - 
பிரம்மா எனும் கற்பனைக் கதாபாத்திரத்தின் 
முகத்தில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - முதலாம் சாதியாம்!
தோளில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - இரண்டாம் சாதியாம்!
தொடையில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - மூன்றாம் சாதியாம்!
காலில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - நான்காம் சாதியாம்!

அட பாருப்பா! இந்த பிரம்மா என்ற கற்பனை கதாபாத்திருத்துக்குள்ளே ஏதோ ஒளிஞ்சிருக்கு என்று ஆச்சரியப்படும் விதமாக, பிரம்மா என்ற கற்பனை கதாபாத்திரம் எங்கிருந்து பிறந்தாராம்? என்று வர்ணாசிரமம் கூறவில்லை. நமக்கேன் இந்த வீண் சிரமம் என்று விட்டு விட்டது போலும்!

பிரம்மா என்ற கற்பனை கதாபாத்திரம், ஆண் என்று கொண்டால், அந்த கற்பனை ஆண்தான் பிள்ளைப் பெறுகிறார் என்றால், இதனை Ripley's Believer it or Not-ல் வேண்டுமானால் பதிவு செய்யலாம் ( Ripley's Believer it or Not! ). இல்லை என்றால், இந்த Medical Miracle-ஐ WHO-வில் பதிவு செய்யலாம். 

'WHO' என்றால் 'யார்' என்ற அர்த்ததில் கூறவில்லை.

'WHO' என்றால் உலக சுகாதார நிறுவனமான World Health Organization ( WHO ).

அறிவியல் பூர்வமாக, குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள் என்று கண்ணியமான முறையில், கீழே உள்ள கானொளியில் காணலாம்.


அது சரி, கற்பனை கதாபாத்திரமான பிரம்மாதான் இப்படி, Top to Bottom - tiredless self delivery செய்வதாகக் கூறி பீற்றுகிறார் என்றால், 

அங்கே தூரத்தில் இருந்து ஒருவர், 'நண்பேண்டா..............' என்று கூறிக் கொண்டு ஓடி வருகிறார். வேறு யார்? அடுத்த கற்பனை கதாபாத்திரமான 'கிருஷ்ணன்' தான்.

பகவத் கீதை எனும் கற்பனை பு(ருடா)ரானத்தில், கிருஷ்னன் எனும் கற்பனை கதாபாத்திரமோ, தான்தான் இந்த நான்கு வர்ணங்களையும் படைத்ததாக Patent கேட்கிறார் போலும்! கீதையில் கூறப்பட்டுள்ளது கற்பனை கதாபாத்திரமான கிருஷ்னன் கூறுவதாக, 'சதுர் வர்ணயம் மயா ஸ்ருஷ்டம்' (பகவத் கீதை அத்தியாயம்-4, சுலோகம்-13) என்று ஜம்சுகிரதத்தில் கூறப்பெற்றுள்ளது.

இப்படியாக வர்ணாசிரம தர்மத்தை படைத்ததாகக், கூறப்படும் கற்பனை கதாபாத்திரங்களான பிரம்மாவாலும் கிருஷ்னனாலும்தான் நம்மில் பலருக்கும் கல்வி மறுக்கப்பட்ட நிலை இருந்ததென்றால் அது மிகையில்லை. அதுதான் உண்மை! இப்படிப்பட்ட இழிந்த தீயவற்றை உடைய இந்துமத இழிவை; 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்றும், 'மனிதர்களாய் பிறந்த அனைவரும் சமமே!' என்றும் கூறி - மறுத்து ஒதுக்குதல் ஷேமங்கானும்!

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்



Hinduism Nonsense | Upload Music

விகடன் > தி ஹிந்து > தினமணி > தினமலர்


து என்ன, விகடன் > தி ஹிந்து > தினமணி > தினமலர் என்ற தலைப்பு இருக்கிறதே என்று வியப்புற தேவையில்லை. 

ஒரே செய்தியானது விகடன் இணையதளத்திலும், தி ஹிந்து இணையதளத்திலும், தினமணி இணையதளத்திலும், தினமலர்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது. நன்று! செய்தி வெளியிடுவதுதானே பத்திரிகையின் வேலை; உனக்கென்ன வந்தது என்கிறீர்களா?

என்னவென்றால், பத்திரிகை உலகில் ஒரு தாரக மந்திரமாக சொல்வது 'Entertain Educate Empower' என்பதாகும். இவற்றோடு, காதில் பூ சுற்றுவதையும் சேர்த்துக் கொள்ளலாம் போலும் இப்போது!

வள வள வென்று பேசாமல் விஷயத்திற்கு வருவோம்.

செய்தி இதுதான் - வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதி பற்றிய முக்கிய தீர்ப்பு வெளிவர இருக்கிறது. அந்தத் தீர்ப்பு சம்பந்தபட்ட விஷயத்தில் தான் விகடன் > தி ஹிந்து > தினமணி > தினமலர்.

ஆதாரம்: கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து செய்தியை வாசிக்கலாம்.
  1. விகடன்
  2. தி ஹிந்து
  3. தினமணி
  4. தினமலர்

புகைப்பட ஆதாரம்: 








ஒரே செய்தி; பத்திரிகை உலக ஜாம்பவான்கள் என்று சொல்லிக் கொள்கின்ற
நான்கு பத்திரிகைகளும், தள்ளுபடி செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு அபராதத் தொகையை வெவ்வேறாக கூறுகின்றனவே!

இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான செய்தியில் இப்படித் தவறுகள் நேரலாமா?

எப்படிப் பார்த்தாலும், மேல் கூறிய நான்கு பத்திரிக்கைகளில் மூன்று பத்திரிகை கூறிய அபராதத் தொகை தவறுதான். ஏனென்றால், எந்த கனிதத்திலும் 'ஐம்பதாயிரமும்' 'இரண்டு லட்சமும்' 'ஐந்து லட்சமமும்' 'பத்து லட்சமும்' எந்த வகையிலும் சமம் இல்லை! ராமானுஜர், 'இரண்டும்' 'ஐந்தும்' 'பத்தும்' சமம் என்று ஏதேனும் தேற்றம்(Theorem) கண்டு பிடித்தாரோ என்னவோ! 

தி ஹிந்து பத்திரிகை மட்டும் 'proposed a fine' என்று கூறியிருப்பதால் சற்றே  திருத்தி வெளியிட வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தாலும்,  தினமலர், தினமணி அல்லது விகடன் 'அபராதத் தொகை' விவரத்தில் தவறு செய்து இருக்கிறது!

தவறு கண்டுபிடிப்பது அல்ல நம் வேலை. மாறாக தவறைத் திருத்த வேண்டும் என்பது தான் நமது கவலை! மேலும் தீர்ப்பு வெளியானவுடன் இந்த பத்திரிக்கைகள் நேர்மையான உண்மையான தகவல் தருவார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

இந்த வேளையில் இதைப் பகிர்வது சிறப்பாக இருக்கும்:
வரலாற்று பதிவாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், நாணயத்துடனும், ஆதார பூர்வமாகவும், அறிவு வளர்ச்சிக்காகவும்; செய்தி வெளியிடும் நாளிதழாக இருக்கும், தந்தை பெரியார் தொடங்கிய விடுதலை நாளிதழ்தான் மதச்சார்பின்மை தொடர்பாக நாம் நம்பும் ஒரே நாளிதழாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லை! இவற்றைக் கொண்டு ஒரு பத்திரிகையின் தரத்தை நிர்னயம் செய்ய வேண்டுமென்றால்
விடுதலை  >  மற்ற பத்திரிக்கைகள் + நாளிதழ்கள்


உண்மையுடன்
தஞ்சை வாஞ்சி

தங்கம் ஆ-தங்கம்!


ங்கம் என்றாலே 'ஆ'வென்று வாய் பிளப்பவறாய்த்தான் இன்றளவிலும் பலரும் இருக்கின்றனர். இதில் ஆண்-பெண் பேதமேதும் இல்லை. பெண்களுக்கோ தங்கத்தின் மேல் சற்றே அதீத ஆர்வம். அழகுக்கு அழகு சேர்த்தது போலுமாயிற்று. பொருளுக்கு பொருள் சேர்த்தது போலுமாயிற்று. இவற்றையெல்லாம் விட, பெண்கள் சிலருக்கு இருக்கும் மற்றொரு ஆசை........ ஆசையா ? பேராசை........ பேராசையா ? ம்ஹூம்.. இல்லை.... பொறாமை! அந்த பொறாமை என்னவென்றால் தாங்கள் அணிந்திருக்கும் பொன் நகையைப் பார்த்து யாவரும் பல்லிளிக்கனும் பிரமிப்படைய வேண்டும் என்பதுதான். இப்படியாக, பிற பெண்களை தங்கள் மேல் பொறாமை பட வைப்பதில்தான் தங்கம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.

மஞ்சள் வண்ணம் மின்னும் பளபளப்பு; பார் போற்றும் வைபவம் எனவாக வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்திய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அந்தத் திருமணத்தை நடத்தியபோது வாங்கிய சம்பளம் ரூ.1. இப்போதோ நீதிமன்றப் படிக்கட்டுகளில் சொத்துக் குவிப்பு வழக்குக்காக அலைந்து கொண்டிருக்கிறார். இது எதைக் குறிப்பிடுகிறது என்றால், மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

இன்றைய தேதியில் வரதட்சனை என்பது கௌரவமாகப் போய்விட்டது. யாருக்கு? என்றால், மணமகன் வீட்டாருக்கு மற்றும் மணப்பெண் வீட்டாருக்கு என இரு வீட்டாருக்கும்தான். நாங்கள் 'இவ்வளவு போட்டோம்', 'இவ்வளவு செஞ்சோம்' 'இவ்வளவு கேட்டோம்' 'அவுங்க எவ்வளவு செஞ்சாங்க' 'மார்க்கெட் நிலவரம் தெரியுமா?' என் ஜம்பம் அடிப்பதற்குத்தான். 'மார்க்கெட் நிலவரம்' என்றவுடன் இன்றைய தேதியில் தங்கம் கிராம் எவ்வளவு என்ற நிலவரம் இல்லை; இன்றைய தேதியில் எவ்வளவு தங்கம் போடுகிறார்கள் சமூகத்தில் என்ற 'மார்க்கெட் நிலவரம்'. இதிலும் கெட்டிக்கார மணமகள்கள் இதுதான் சமயம் என்று, சமயோசிதமாக பிறந்த வீட்டில் இருந்து இருப்பதை உருவிக்கொண்டு, புகுந்த வீட்டிற்கு பொருள் சேர்க்கிறார்கள்.

இது போகட்டும் என்று, பொன் அல்லது வரதட்சனைப் பெறாத மணமகன் யாராவது இருக்கிறாரா என்று தேடிப்பார்த்ததில் இதுவரை யாரும் கண்ணுக்கு அகப்படவில்லை. ஆண்கள் கூற்று என்னவென்றால் "நாமாக கேட்பதில்லை; கேட்காமல் வருவதைத் தடுப்பதில்லை " என்று கலைஞர் வகையறா கன்ஃபுயூஷன் டையலாகை பெருமிதமாய் கூறுவதாய் எண்ணி, சுயநலமாய் தப்பித்துக்கொள்ளுகிறார்கள்.

[இவ்வளவு வரட்டு பேச்சு பேசுறீரே.. நீர் எப்படிங்கானும்..]

தங்கத்தின் தரம், இந்தியாவை விட வெளிநாடுகளான சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் சிறப்பாக இருப்பதாக வீட்டில் கூறுகிறார்கள். அதெல்லாம் நமக்கெப்படிங்கானும் தெரியும். அதுவும், அந்த நாடுகளில் தங்க மார்கெட்கள் மிகப் பிரசித்தம். வளைகுடாவில் அதனை கோல்ட் சோக் (Gold Souk) என்று கூறுகிறார்கள்.

இந்தியா வந்த போது வீட்டில், "கோல்ட் சோக்-கில்(Gold Souq) தங்கம் நல்ல சூப்பரா குவாலிட்டியா இருக்குமே! அங்கே எல்லாம் போயிருக்கியா?" என்று கேட்டார்கள்.

நமக்கோ நாரதர் நாக்கில் நாட்டியம் ஆடுபவர். "ஒ! போயிருக்கேனே.. பயங்கர நெரிசலான ஏரியா.. எப்பம் பார்த்தாலும் கூட்டம் அலைமோதும்.. மக்கள் பரபரப்பாக இருப்பார்கள்... " என்றோம்; மேலும் தொடர்ந்து, "ஆனா குவாலிட்டி பத்தியெல்லாம் எனக்கு தெரியாது" என்றோம். மேலும், "அங்க கோல்ட் சோக்-ல நடந்து போனப்ப, கடைத்தெரு வழியா போகும்போது கையில ஃபோட்டோ வெச்சுகிட்டு, 'இந்தாங்க பாருங்க; இந்தோ பாருங்க; இது ஓகே-வா?' அப்டின்னு காட்டுவாங்க!" என்றேன்.

வீட்டிலே ஆச்சரியமாய், "ஓ! அப்படியா! நகை டிசைனை மார்க்கெட் பன்ன இப்படி கடைவாசலில் நின்னு ஃபோட்டோவைக் காட்டுறாங்களா?" என்று அப்பாவியாய் கேட்கிறார்கள்.

நாமோ அமைதியாய், "கடை வாசல்ல இல்லை" என்றோம்.

வீட்டில் சற்றே குழப்ப ரேகையுடன், "வேற எங்க?" என்கிறார்கள்.

நாமோ, முன்பு இருந்த அதே பொறுமையுடன், "தங்க மார்க்கெட் இருக்குற ஏரியாவில் உள்ள லாட்ஜ் வாசலில்" என்றோம்.

வீட்டிலோ, குழப்ப ரேகை போய், சந்தேகரேகைத் துளிர்விட, "என்ன ஃபோட்டோ?" என்கிறார்கள்.

நாமோ, மீண்டும் பொறுமையுடன், "பெண்கள் ஃபோட்டோ" என்றோம்.

இதைக் கூறியவுடனேயே, நாரதர் எழுந்து நின்று நாட்டியம் ஆடத்தயாராகி விட்டார் நாக்கில். எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்டதைப் போல், நாமோ, "தங்கம் என்றால் எப்படி வாங்க வேண்டும். உரசி பார்த்துதான் வாங்க வேண்டுமோ?" என்று அதே பொறுமையோடும் பவ்யத்தோடும் கேட்க, நாரதர் நாட்டியத்தின் உச்சியில் இருந்தார் என்றால் பாருங்களேன்!

ஏனோ தெரியவில்லை, வீட்டில் இப்போதெல்லாம் தங்கத்தின் தரம் வெளிநாட்டைவிட இந்தியாவிலேயே சிறப்பாக இருப்பதாகக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், "கோல்ட் சோக்" எல்லாம் போய் அலையாதே என்றும் கரிசனமாய்க் கூறுகிறார்கள். ஏன் சார்! எங்கே, தங்கத்தில் குவாலிட்டி(Quality) பாக்க போய் கடைசியில் கில்டியாக(Guilty) முடிந்துவிடும் என்ற கரிசனமோ!

சரி அத விடுங்க சார்!

கிளாஸ்-மேட் (CLASS Mate) எல்லாம் க்ளாஸ்-மேட்(GLASS Mate) ஆகின்ற தருனத்தில் தங்கபாட்டில் என்றால் அதன் அர்த்தமே வேறு. என்ன அர்த்தமா? தங்கத்தின் கெமிக்கல் சிம்பல்-AU, கெமிக்கல் நேம்-AURUM. வார இறுதியில் வகுப்பு நண்பர்கள் குழுமும் போது, தங்க பாட்டில் என்றால் அதன் அர்த்தமே வேறு! அதாவது, AURUM என்ற வார்த்தையின் கடைசி மூன்று எழுத்தான 'RUM' என்ற வார்த்தையைப் பார்த்தாலே புரிந்து போகும். முதல் இரண்டெழுத்து 'தங்கத்தை' குறிக்க, கடைசி மூன்றெழுத்து 'பானத்தை' குறிக்க, அந்த வேளையில், கிளாஸ்-மேட்ஸ் (CLASS Mate) எல்லாம் ஒன்ற சேர்ந்து க்லாஸ்-மேட்ஸ்(GLASS Mate) ஆகின்ற தருனத்தில் தங்கபாட்டில் என்றால் அது சோமபானத்தைக் குறிக்கும்.


சுத்தமான தங்கம் என்பது 24 கேரட். அந்த சுத்த தங்கத்தை வைத்து தங்கக்கட்டி மட்டும்தான் செய்யமுடியும்; ஆபரணங்கள் செய்ய முடியாது. சூடான சுத்தமான தங்கம் எடுத்து சற்று காப்பர் மற்றும் சில உலோகங்களைச் சற்றே கிண்டி எடுத்து, ஆறவைத்து எடுத்தால் 22 கேரட் தங்கம் கிடைக்கும். கூடவே தங்க நகைகளும் கிடைக்கும். உபரியாய் 'அசூயை' கிடைக்கும்.

அந்த சுத்த 24 கேரட் தங்கத்தில் சற்று மிகுதியாகவே காப்பர் மற்றும் சில உலோகங்களைக் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்தால் பற்பல டிசைனில் வகை வகையாய் நகைகள் கிடைக்கும். விலையோ பர்ஸை கடிக்கும்.

இவற்றைத் தவிர, தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடும் கூட என்கிறார்கள். தங்கம் அதன் சுரங்கத்தில் கட்டிகட்டியாய் இருக்காது, ச்சும்மா போய் வெட்டி எடுத்துக் கொண்டு வந்துவிட. தங்கம் பிரித்தெடுக்கப் படுவதற்கு முன்னால் பல்வேறுபட்ட உழைப்பு இருக்கிறது. பல ஆயிரம் கிலோ தங்கத் தாது வெட்டி எடுத்து வந்தால்தான் சில கிராம் தங்கம் கிடைக்கும். இதைப்போலவே, ஒரு மனிதனிடம் ஒரு சிறிய சிறந்த நற்பன்பைப் பார்க்கும்முன் பல ஆயிரம் தூசுகளைத் தான்டித்தான் பார்க்க இயலும்.


எதில் எல்லாம் சிறப்பு இருக்கிறதோ, அதிலெல்லாம் போலி என்ற ஒன்று உருவாகும் என்ற உலக நியதிக்கு இனங்க, தங்கநகைகள் போல தோற்றம் இருக்கின்ற கவரிங் நகைகளும் பிரசித்திதான். அது சரி! இது என்ன கவரிங் நகை என்று வினவினால். கவரிங் நகையில் இருக்கிற ஜொலிப்பால், தங்கம் போல் காட்டி ஆண்களை 'கவர்' பண்ணத்தான் என்கிறார்கள் கூலாக. ஓ! அதனால் தான் இது 'கவரிங்' நகை போலும்!

திருப்பதி கோவிலின் உட்பிரகாரத்தில் தங்கத்தகடுகள் பதிக்கப் போகிறார்களாம். எல்லாம் மக்கள் காணிக்கையாக்கிய பணம். செய்யட்டுமே.. ஷேமமாய் செய்யட்டுமே .. அப்படியே கோவிலுக்கு வர்ற பக்தர்களுக்கு, ஒரு கால் கிராம் தங்கக் காசு கொடுத்தால்... கொடுத்தவனுக்கே திரும்பவும் கொடுக்கப்பட்டது என்ற திருப்தியும் ஏற்படும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் கூடுவார்கள். பிசினசும் சூடு பறக்கும். இதுதான் சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது.

தந்தை பெரியார் அவர்கள், பெண்களின் தங்க நகை அலங்கார மோகத்தைப் பற்றி மிக சிறப்பாக இவ்வாறாக குறிப்பிடுகிறார்கள்:
"அலங்கரிப்பு இல்லாத பெண்களைப் பார்த்தால்தான் குணத்தை மதிப்பார்கள். மதிக்கவும், நேரமும் புத்தியும் போகும். அலங்கரித்த பெண்ணைப் பார்த்தால் உடலையும் உருவத்தையும் மதித்துத் தப்பான உணர்ச்சியைத்தான் பெறுவார்கள். சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதிலும் பார்வைக்கு வெறுப்பு, அசிங்கம் இல்லாமல் பசுந்தாய் (Neat-டாய்) இருக்க வேண்டும் என்பதிலும் நமக்கு எள்ளளவும் அக்ஷேபனை இல்லை." மேலும், "பெரிதும் இந்த மாதிரி அலங்காரம் எதற்குப் பயன்படுகிறது எப்படிப்பட்டவர்களுக்கு இது தேவை இருக்கிறது என்று பார்த்தால், மிகவும் அதிருப்தியான பதில்தான் காணப்படும். ஏனெனில் நல்ல அறிவும், மானமும், நாகரிகமும் உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களைப் பார்த்து 'இந்தப் பெண் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருக்கிறாள். அழகுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறாள். இவள் மிகவும் சிங்காரமாக இருக்கிறாள்' என்று சொல்லுவதற்கே இடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்".

பெரியார் சொன்னால் சரிதான்!

இப்படிப் பட்ட பெண்களைப் பார்ப்பது எப்போது? அதுதான் ஆ-தங்கம்!


-பொன்னியின் செல்வன்-

ஏன் கடவுள்?



18+  வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!

ட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது.  இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.

வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால்,  அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?"  என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment;  இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.

அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.

இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது. 

குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.

திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ?   புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.

ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.

அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா?   அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?

மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு,  இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.  நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.

ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு,  விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'  என்றார். 

ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்;  என்ன ஒரு டைமிங். 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' 

அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?

இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.

ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும். 

அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.

அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!

நம் கேள்விகள் இதுவே.

அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்?   வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion. 

கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.

இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?

என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.


ந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு.  ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.


மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.

நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?



-பொன்னியின் செல்வன்-




கல்வியும் கேள்வியும்

Exam Royalty Free Stock Photo

ற்போது, இந்தியா முழுமைக்கும், பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரே நுழைவுத் தேர்வுமுறை வரலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. அதாவது சீர்மை uniformity படுத்துவதற்காக; மற்றும், மாணவர்கள் அதிகமான நுழைவுத்தேர்வுகள் பங்கேற்கும் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக.

அதாவது, மாணவர் அதிகாலையிலேயே எழுந்து, குளிரும் பனியில், ஐ.ஐ.டி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வந்து; சிற்றுண்டி என்ற பெயரால் சிறிது பிரெட்டை பிட்டுச் சாப்பிட்டுவிட்டு; பின், பள்ளிக்கு சென்று பாடங்களையும் கவனித்துவிட்டு; மாலை வந்து ஸ்டேட் என்ட்ரென்ஸ் எஃஸாம் கோச்சிங்  சென்றுவிட்டு; பின், பள்ளியில் பயிலும் பாடத்திற்கான டியூஷன் சென்றுவிட்டு வந்து; அதற்கும் பின், பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடம், கோச்சிங் கிளாசில் கொடுத்த வீட்டுப்பாடம், டியூஷனில் கொடுத்த வீட்டுப்பாடம் என அனைத்தையும் முடித்துவிட்டு மணியைப் பார்த்தால் இரவு பணிரெண்டு.

அதிலும் மாணவர்களுக்கு இருக்கும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் பாடம் நடத்தும்போது, என்னதான் டியூஷனில் அந்தப் பாடத்தை ஏற்கனவே கற்றிருந்தாலும், டியூஷனில் அந்தப் பாடத்தை கற்காதது போலும், தான் டியூஷனே போகவில்லை, பள்ளி ஆசிரியராகிய உங்கள் பாடத்தைத்தான் முழு கவனத்தோடும் கவனிக்கிறேன் என்பதுபோல் கவனிக்க வேண்டிய கட்டாயம். இல்லாட்டி, இன்டேர்னல் மார்க் யார் சார் போடுறது? பள்ளி ஆசிரியரல்லவா இன்டேர்னல் மார்க் போடுவது.

+2 முடிந்து நுழைவுத்தேர்வு இருந்த காலங்களில், நுழைவுத்தேர்வு எழுதப் போகும்போது மறக்காமல் தாயக்கட்டை எடுத்துப்போகும் வழக்கம் எல்லாம் உண்டு. பின்னே, பதில் எப்படி எழுதுவதாம்? அதிலும் சிலர், நல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், துளியும் பயமின்றி தைரியமாக பரீட்சையெழுதலாம். என்னதான் முட்டி மோதினாலும், அந்தர் பல்டியடித்தாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை பிறகு ஏன் வீண் டென்ஷன்? அப்படி இருக்கையில்தான், ஆகா! தாயமே நம் சகாயம், என்று எண்ணத் தோன்றும்.

அப்புறம் இந்த கணக்குப் பாடம் இருக்கே, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அப்போதுதான் முடிந்த +2 பொதுத்தேர்வில், 10 மதிப்பெண் கேள்வியாக வந்த அதே கேள்வி; அதுவும், மூன்று பக்கம் வரை நீள்கிற பெரிய பதில்; நுழைவுத்தேர்விலோ வெறும் கால் மதிப்பெண் அல்லது அரை மதிப்பெண்ணுக்கு கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கும். அப்போது மட்டும் தாயத்தை சற்றே வேகமாக உருட்டுவது ஷேமம். நேரம் பொன் போன்றது இல்லையா?

நுழைவுத்தேர்வில் கேள்வி வரிசைகள் விதவிதமாக இருக்கும். அதாவது, கேள்விகள் ஒன்றுதான்; ஆனாலும், கேள்வி வரிசைகள் வித்தியாசமாக இருக்கும். தேர்வு அறையில், வரிசையில் உட்கார்ந்திருக்கும் மாணவருக்கு, கேள்வி வரிசை வெவ்வேறாக இருக்கும். ஆனாலும் கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? வழக்கம்போல், முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர் எழுதிய அதே பதிலை, பின்னால் இருக்கும் மாணவரும் எழுதினால்தான், தேர்வு எழுதிய திருப்தி இருக்கும்.

முன்னால் இருக்கும் மாணவருக்கு கேள்வி, நிலவைப் பற்றி இருக்கும்;
பின்னால் இருக்கும் மாணவருக்கோ கேள்வி, தாஜ்மகாலைப் பற்றி இருக்கும். ஆனாலும் விடை தேர்வு செய்வதோ முன்னால் இருக்கும் மாணவரைப் பார்த்து. இப்படியாக, அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுபோடும் விதமாக மதநல்லிணக்கமும் இருக்கும் நுழைவுத்தேர்வில்.

பெரும்பாலும், நுழைவுத்தேர்வுகள் அருகில் உள்ள கல்லூரிகளில் நடக்கும். நுழைவுத்தேர்வு நடக்கும்போது, சில கல்லூரிகளில் ஐஸ்சர்பத் மோர் எல்லாம் கொடுப்பார்கள். நுழைவுத்தேர்வு முடிந்தவுடன் திரும்பிவரும் மாணவரிடம், 'என்ன பரீட்சை சூப்பரா?' என்று வினவினால், மாணவனோ 'ம்.... மோர் ரொம்ப சூப்பர்' என்று சொல்வதையும் கேட்க நேரிடும். பின்னே, எது சிறப்பாக செய்தாரோ அதைத்தானே மாணவர் சொல்லமுடியும்.

அதிலும் சில மாணவர், ஏதோ சட்டசபைக்கு வரும் அரசியல்வாதிபோல், நுழைவுத்தேர்வு அறைக்குள் நுழைந்து, அடுத்த ஐந்து நிமிடத்தில் பேப்பரை கொடுத்துவிட்டு சென்றுவிடுவர்.

இவ்வாறாக, நுழைவுத்தேர்வு பல சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் சில வருடம் முன்னர்தான் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

மேலும், நுழைவுத்தேர்வை ரத்துசெய்ததன் மூலம் கிராமப்புற மாணாக்கர் பலரும் இப்போது நல்ல விதமாக பொறியியல் கல்லூரிகளில் சேர, அவர்கள் எடுத்த நல்ல பொதுத்தேர்வு மதிப்பெண்ணே போதும் என்ற நிலை இருக்கிறது. கிராமப்புற மாணாக்கர் தற்போதுதான் நகர்ப்புற மாணவர்களின் போட்டியை சமாளிக்க முடிகிறது. நகர்ப்புற மாணவர்களால் நுழைவுத்தேர்வு சிறப்பாக செய்வதற்கு தகுந்த வசதிகள் இருக்கின்றன. ஆனால், கிராமப்புற மாணாக்கருக்கு அந்த வசதியும் இல்லை, வசதி இருப்பினும் செலவு செய்யும் சூழ்நிலையும் இருப்பதில்லை. அப்படி இருக்கையில், கல்வியில் இரண்டு சம  சூழ்நிலைகள் உள்ளோருக்கு இடையில்தானே போட்டி இருக்கவேண்டும். அதுதானே முறையாக இருக்கும்?  அந்தவகையில் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் ரத்துசெய்தது சிறப்பான செயலாகும்.

மாநிலத்திற்குள்ளேயே இந்த கல்வி சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்றால், இந்தியா முழுதும் ஒரே நுழைவு தேர்வு வந்தால், பின், மாநிலத்தின் மாநகரங்களில் உள்ள மாணாக்கருக்கும் நாட்டின் தலைநகரில் உள்ள மாணாக்கருக்கும் கூட அது கல்விச்சூழலில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் அபாயம் இருக்கிறதா என்றுத் தெளிவாகத் தெரியவில்லை. அப்படி நகர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உண்டாக்குமேயானால்; அது, கிராமப்புற மாணாக்கரை எவ்வளவு பாதிக்கும்? மிக அதிகமாக அல்லவா பாதிக்கக்கூடும்.

இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் வரும் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறதாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2002 ஆம் ஆண்டில், 86வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது; அதாவது, கல்வி அடிப்படை உரிமை (Right to Education). அதில் குறிப்பிடப்படுவது என்னவெனில், ஆறு முதல் பதினான்கு வயதுவரை உள்ள அணைத்து மாணவர்களுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் கல்வி அடிப்படை உரிமையின் நோக்கம். இது இன்னும் ஏட்டளவிலே இருக்கிறது. இதை நடைமுறைப் படுத்த செயல்வடிவம் இன்னும் வரவேண்டி உள்ளது.

கல்வி அடிப்படை உரிமையினால் குறைந்தபட்சம் சில தலைமுறையையாவது மேல்நிலைப்பள்ளி அடைய வைக்க முயற்சி செய்துவிட்டு, பிறகு தானே இந்த மேல்நிலைக் கல்விச்சீர்மை பற்றி சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.

எடுத்துக்காட்டிற்கு,  உயர்கல்வி எனும் சீர்மையான கனியை அடைய வேண்டும் என்கிறார்கள்; அப்படியெனில் முதலில் அடிப்படைப் பள்ளிக்கல்வி எனும் மரம் சிறப்பாக அமைய வேண்டும் அல்லவா? மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறாக இருக்கிறதே.

"இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 88 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில்லை. இந்தநிலையை போக்க உயர்கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது." என்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் அவர்கள்.

அப்படி இருக்கையில்,  கல்வி அடிப்படை உரிமையை நடைமுறை படுத்துவதும், நுழைவுத்தேர்வு என்ற சுமையை அகற்றுவதும், கல்விக் கடன்கொடுக்கும் நடைமுறையை மேலும் எளிமை படுத்துவதும் தானே நிறைய மாணாக்கர் உயர்கல்விக்கு பல்கலைக்கழகங்களை அடைய ஏதுவாக இருக்கும்.


- பொன்னியின் செல்வன் -

பொங்கலன்று பாட்டியுடன்



ந்தப் பொங்கலுக்கு, பொங்கலோ பானையில் பொங்க, நிகழ்ச்சி நிரல்களோ தொலைக்காட்சியில் பொங்கிவழிந்தன.


எதை எடுப்பது? எதை விடுப்பது? ஆனாலும், கட்டைவிரல் நுனி களைத்துத்தான் போயிருக்கும். ஆமாம்! இருக்காதாப் பின்னே; கட்டைவிரலால் அந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்தியழுத்தி கட்டைவிரலே தேய்ந்திருக்கும். கழுதைத் தேய்ந்து கட்டைவிரலான கதையாய், கடைசியில் கட்டைவிரல் தேய்ந்து சுண்டுவிரலான கதையாய் அல்லவா ஆகியிருக்கும்.


நல்லவிதமாக, இந்த குழப்பமேதும் இல்லாமல், பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்ததால் கட்டைவிரல் தப்பித்தது.


சூர்யாவின் பேட்டி ஒரு சேனலில் வந்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில், மீடியாவைப் புகழ்ந்துத் தள்ளிவிட்டார் மனிதர். ஏனோத் தெரியவில்லை; இடம் பொருள் ஏவல் ஏதென்றறியாமல், 'ஈனம்' எனும் வார்த்தையினால் தோன்றிய சினம் குறைக்கவோ?


சூரியாவின் தம்பி கார்த்தியின் பேட்டிகள் சுவாரசியமாக இருக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது உள்ளத்தில் இருந்து பேசுவதும்; இயக்குனர் வரும்போது, எழுந்துநின்று மரியாதை செய்வதும்; பெருமைகளை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதும் என பிரமிக்க வைக்கிறார். சிவகுமாரின் மைந்தன் அல்லவா; சூரியாவின் தம்பி அல்லவா!


'நீயா நானா'  சிறப்பு நிகழ்ச்சியில் 'பேச்சு' தான் விவாதத்தலைப்பே. பேச்சாளர்கள் அணியில் உள்ள ஊறறிந்த பேச்சாளர்கள் மைக்கைப்பிடித்தால் விட மாட்டேனென்கிறார்கள். கேட்கப்படும் கேள்விக்கு நேராகவும் விடையளிக்க மாட்டேன்கிறார்கள். இதுல TRP ரேட்டிங்க் ஏத்தற மாதிரி, இறுதியில் ஒரு சச்சரவுப் பேச்சை ஒளிபரப்பி, மறக்காமல் 'தொடரும்' போட்டு விட்டார்கள்.


இணையத்தில் பார்த்தாலும் சில நிகழ்ச்சிகளை விளம்பரங்களோடுதான் பார்க்க முடிந்தது. அப்போதுதான் புரிந்தது; விளம்பர இடைவேளையில்தான் நிகழ்ச்சி ஓளிபரப்பாவதை. யாரு சார் சொன்னா பொருளாதாரம் படுத்து கிடக்குன்னு?


அவ்வப்போது, தொகுப்பாளினிகள் வந்து தூய இனிய செந்தமிழில், 'பொங்கள் வால்த்தும்' கூறினர், 'ஷோலர்' வரலாற்றையும் விவாதித்தனர்; உபயம்: ஆயிரத்தில் ஒருவன்.


'தமிழ் படம்' குழுவினரின் கலந்துரையாடல்கள் நல்ல நகைச்சுவையாகவும் காமெடியாகவும் இருந்தன. திரைப்படம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. 'தமிழ் படம்' பெயரில் 'ப்' இல்லை; ஏனோ தெரியவில்லை. மருதையில் இப்படித்தான் பேர் வைப்பாங்களோ!


இடையிடையே ஸ்ரேயா வந்துப் போனார். அதான் சொல்லியாச்சே 'இடையிடையே' என்று.


முக்கிய சேனல்களில், பட்டிமன்றம் இருந்தன. சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், இறையன்பு பட்டிமன்றமும் மிகச்சுவையாக இருந்தன. இறையன்பு பேச்சால் பிரமிக்க வைக்கிறார்கள். ஜெயா டி.வியில் பட்டிமன்றம் பயங்கர போர்;முழுமையாகப் பார்க்கப் பிடிக்கவில்லை. விஜய் டி.வியிலோ புதுமையாய் ஆன்மிக பட்டிமன்றம் இருந்தது. தலைப்பு, 'அவதாரம் தோன்றுவது காக்கவா? அழிக்கவா?' என்பதுதான். என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்டுவிடுவோம் என்று கேட்டதில், பல நேரங்களில் ச்சிப்பு பொத்துகிட்டு வருகிறது. மிக விரைவில் கி.வீரமணியும், கலைஞர் அவர்களும் இந்த தலைப்பில் பட்டிமன்றம் வைத்துப் பேசினால் ஆச்சரியமில்லை.


பொங்கல் தினத்தன்று ஒரு சேனலில், 'பொங்கல் செய்வது எப்படி' என்று ஆதிமுதல் அந்தம்வரை ஓன்னொன்னா விளக்கிக்கொண்டு இருந்தார்கள். 




அது சரி! 
குழந்தைகள் தினத்தன்று என்ன நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள் 
என்று அவர்களை விசாரிக்க வேண்டும்.




விஜய் டி.வியில், கோபிநாத்துடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி மயிர்க்கூச்செரிய வைத்தது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 'அகரம்' ஃபௌண்டேஷனின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹேட்ஸ் ஆஃப் சூர்யா!


என்ன ஒரே வருத்தம்ன்னா, பொங்கல் அன்று பாட்டிகிட்ட தொலைப்பேசியில பேசமுடியல.பாட்டியின் குரல் கேட்க முடியல. பாட்டி செல்போன் எங்கேயோ எப்படியோ தொலஞ்சிடுச்சாம். பாட்டியோட செல்ஃபோன உபயோகிக்க வாங்கிட்டு போறவங்க, எங்கயாச்சும் மறந்து வச்சிடறாங்களாம். பொங்கல் தினத்தன்று சர்க்கரைப் பொங்கல் சாப்பிட முடிந்தது. வெறும் சக்கரைப் பொங்கல் வாயில போட்டு என்ன பிரயோசனம்; அதுவும் பாட்டியின் குரல்கேட்க முடியாமல் 'செவிக்கு உணவில்லாத போது'!



-பொன்னியின் செல்வன்-

தமிழ் தழைக்க


மீபத்தில், முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் தமிழ் எழுத்து சீரமைப்பு பற்றிய கருத்துக்களை அறிய நேர்ந்தது. அந்த கருத்துக்களின் வழிவந்ததே இந்தக் கட்டுரை.

எழுத்து என்றால் வடிவம் தானே? அதுவும் ஓர் ஓவியம் தானே? ஆக, எழுதத்தெரிந்தவர்கள் எல்லோரும் ஓவியர்களே; குறிப்பிட்டு சொல்வதாய் இருந்தால் சொல் ஓவியர்கள்!

நவீன ஓவியங்களிலோ (Modern Art ), அதைக் காண்பவர் அந்த ஓவியத்தில் இருந்து பலவற்றை புரிந்துகொள்ளக்கூடும். அப்படிப்பட்ட கவலை எல்லாம் இந்த சொல் ஓவியத்தில் இல்லை. ஆனாலும், 'அ' என்ற சொல் ஓவியத்தைப் பார்த்து, வாய்திறந்து 'ஆ' என்று நெடிலாய் வாசித்துவிட்டால் சற்றே சிக்கல் தான்.

'அ' எனில், ஒலி; ஓவியம்;எழுத்து;குறியீடு; ஓர் எண்ணம்;

உயிர் எழுத்துக்களை உச்சரிக்க பற்கள் தேவையில்லை. குழந்தைகளும் பொக்கைவாய் பெரியவர்களும் கூட உயிரெழுத்துக்களை உச்சரிக்கலாம். அதிகமான உயிரெழுத்துக்கள் தமிழுக்கு இருப்பது சிறப்புதான்.

உயிர் இல்லாமல் உடல் இல்லை;  ஓர் உடலில் உயிரில்லை எனில் அது வெறும் பிணம். உயிரெழுத்து இன்றி எந்த தமிழ் வார்த்தையும் இல்லை. அவ்வகையில் தமிழ் உயிரோட்டமான மொழியும் கூட.

ஒரு மொழி முதலில் எண்ணமாக உருவாகி, சைகையாக கையாளப்பட்டு; பின், ஒலியாக எழுப்பப்பட்டு; பிற்பாடே, அந்த ஒலிக்கு நிகரான வரிவடிவம் வரையப்பட்டிருக்கும். பிற்பாடே, வார்த்தைகள் வந்திருக்கும்; அதன்பின்னேதான் இலக்கணம் வந்திருக்கும்; தொடர்ந்து இலக்கியங்கள் வந்திருக்கும். இதுதான் ஒரு சீரிய செம்மொழியின் பரிணாமவளர்ச்சி. ஆக, ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சிக்கு அதிமுக்கிய காரணம் எண்ணம்; அதாவது சிந்தனை. 

சிந்தனை இருப்பதால்தான் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; வாழ்வார்கள்.

இன்றிலிருந்து 2500 ஆண்டுகட்கு முன்னரே, தமிழில் இலக்கண நூல் தொல்காப்பியம் இய்ற்றப்பட்டுள்ளது; எனில், அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் தமிழுக்கு வரிவடிவம் வந்திருக்கும்? வரிவடிவம் வருவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் ஒலிவடிவம் வந்திருக்கும்? அப்படியெனில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழன் சிந்திக்க தொடங்கியிருக்கிறான்! நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு, என்னே ஓரு தொடர்ச்சி! இம்மொழி மென்மேலும் உயர வேண்டும் அல்லவா? அதை, எப்படி மேலும் சீர்படுத்த முடியும்? இதோ பார்க்கலாம்.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தி ஏழு.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ

மெய் எழுத்துக்கள் மொத்தம் 18 : க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216.

ஆய்த எழுத்து 1.

மொத்த எழுத்துக்கள் :12 + 18 + 216 + 1 = 247

நமது மூளைக்குள் இருக்கும் நியூரானுக்கு ஒலி முதன்மை; அந்த ஒலிக்கு இணையான சொல்லோவியமாக எழுத்து இருக்கும். ஆக, தமிழை பேசுவதோடல்லாமல், எழுதத்தெரிய நமக்கு 247 சொல்லோவியங்கள் தேவை. ஆக, நம்மிடம் 247 ஒலிகளும், அதற்கு இணையாக 247 சொல்லோவியங்களும் தேவை.

இதில் மாறாமலிருப்பது ஒலி; மாறுவது, மாறியது, மாறிக்கொண்டிருப்பது, மாறவேண்டியது சொல்லோவியம் எனப்படும் எழுத்து. ஆனாலும், அவ்வளவு சொல்லோவியம் தேவையா? என்றால், அவ்வளவு தேவையில்லை. ஏனென்றால், அதற்கு துணையெழுத்துக்கள் இருக்கின்றன. எடுத்துகாட்டிற்கு, கீழே உள்ளதை பார்த்தால் புரியும்.
    க் + அ =    க
    க் + ஆ =    கா
    க் + இ =    கி
    க் + ஈ =    கீ
    க் + உ =    கு
    க் + ஊ =    கூ
    க் + எ =    கெ
    க் + ஏ =    கே
    க் + ஐ =    கை
    க் + ஒ =    கொ
    க் + ஓ =    கோ
    க் + ஔ =    கௌ
    .
    .
    .
    .
    ன் + ஔ =    னௌ

இப்படியாக மொத்தம் 247 சொற்களை எழுத மொத்தம் 107 தனித்த சொல் ஓவியங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஏனெனில், 

'க'-வுக்கும் 'கா'-வுக்கும் ஒரேயொரு துணைக்கால்தான் வித்தியாசம். 

'க'-வுக்கும் 'கெ'-வுக்கும் ஒரேயொரு ஒற்றைச்சுழி கொம்புதான் வித்தியாசம்.

'க'-வுக்கும் 'கே'-வுக்கும் இரட்டைச்சுழி கொம்பு மட்டும்தான் வித்தியாசம். 

அதாவது, 'க' எனும் சொல்லோவியத்திற்கும், 'கா' எனும் சொல்லோவியத்திற்கும் ஒரேயொரு துணைக்கால்தான் வித்தியாசம். இப்படிப் பார்க்கையில், மொத்தம் 107 தனித்த சொல்லோவியங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மொத்தமுள்ள 247 தமிழ் எழுத்தையும் எழுதிடலாம்.

இந்த 107 தனித்த சொல்லோவியங்களை மேலும் குறைக்க முடியுமா? அதைக் குறைப்பதால் தமிழைக் கற்றல் எளிதாகுமா? என்ற ஆராய்ச்சியின் முடிவாக, வா.செ. குழந்தைசாமி அவர்கள் இந்த 107 தனித்த சொல்லோவியத்தை குறைத்து, 39 தனித்த சொல் ஓவியம் போதும் என்கிறார்கள். அதாவது மூளையில் உள்ள நியூரானில், வெறும் 39 சொல் ஓவியங்களை மட்டும் பதிந்தாலே போதும். அப்பாடா! நம் குழந்தைகளாவது பிழைத்தார்களே!

அது சரி, அதை எப்படி 39 தனித்த சொல்லோவியமாக குறைத்திருக்கிறார்கள் என்று ஆவலாய் இருந்தால் இதை சொடுக்கவும் http://www.tamilvu.org/esvck/index.htm

அது சரி, இந்த சொல் ஓவியத்தைக் குறைப்பதால் பயன் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உலகமயமாக்கப்பட்ட இந்த நாளில், வருங்கால தமிழ் இனத்தின் குழந்தைகள் தமிழை எளிமையாய் கற்க, சீர்படுத்தும் முயற்சிதான் இது.

சிறப்பாய் சிந்திக்கும் சீரிய தமிழ் இனமே! சற்றே சிந்தித்துப் பாருங்கள்; வருங்கால நம் தமிழ் குழந்தைகள், "அ means A-வா?" என்று கேட்டால், தமிழரின் தாய்மொழி தமிழா? ஆங்கிலமா? குழந்தைகளைக் குறைகூறவில்லை; ஆங்கிலத்தை தாழ்ச்சிசெய்யும் நோக்கமும் இல்லை; ஆனாலும், தாய்மொழியாம் தமிழ்மொழி தொடர வேண்டும் எனும் வேட்கைதான். குழந்தைகளுக்கு தமிழ்கற்கும் சூழ்நிலையும், கற்றலில் எளிமையும் கொடுக்க இயலுமல்லவா?

கீழ்கண்டது, நமது வேண்டுகோள்.
இந்த 'ஔ' என்ற உயிரெழுத்துக்கு ஒரு தனித்தன்மையான சொல் சித்திரம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.  ஜப்பானிய மொழியில் ஒரு சொல் உள்ளது: Poke-Yoke; அப்படியெனில், ஆங்கிலத்தில் Fool Proof; அதாவது, சாமானியனும் தவறு இழைக்க முடியாத நிலைப்பாடு. எடுத்துக்காட்டிற்கு சொல்வதாய் இருந்தால் எழுதுகோலின் மூடியை ஒரு குறிப்பிட்ட திசையில் சுழற்றினால் மட்டும்தான் எழுதுகோல் திறக்கப்படும் / மூடப்படும். அதாவது, எங்கெல்லாம் தவறுநேர வாய்ப்பிருக்கிறதோ அங்கேயெல்லாம் இந்த Poke-Yoke பிரயோகிக்கப்படலாம். 

அதுபோல இந்த 'ஔ' என்ற சொற் சித்திரத்தை(குறியீட்டை) சீர்செய்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், இந்த எழுத்து சித்திரம் 'ஓ' என்ற உயிரெழுத்தும் கொண்டுள்ளது; 'ள' என்ற உயிர்மெய்யெழுத்து சித்திரமும் கொண்டுள்ளது. ஆக 'ஔ' வாசிக்கையில் தவறு நேர வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க, 'ஔ' என்ற சொல்லுக்கு, புது சொற்சித்திரம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். இதைத் தமிழ் மூதாட்டி 'ஔ'வையார் கூட ஒப்புக்கொள்ளக்கூடும். இல்லையெனில் ஔவையாரை ஒ-ளவையார் என்று வாசித்து இம்சித்து விடக் கூடும்!





[ ஔ = ''.

  இது எப்டி இருக்கு! ]




தந்தைப் பெரியார் காலத்தில் செய்த எழுத்து சீர்திருத்தங்கள் எளிமையாய் நம் காலத்திற்கு எடுத்துவரப்பட்டது. அதேபோல வரும் தலைமுறைக்கு இன்னொரு எளிமை சீர்திருத்தம் தேவைதானே? இது கலைஞர் காலத்தில்தான் சாத்தியம்; பார்க்கலாம். உலக செம்மொழி மாநாட்டில் இதற்கு அடித்தளம் அமையலாம் என்று நம்புவோமாக.




வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!



பொன்னியின் செல்வன்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்