உன்னைப் போல் ஒருவன் !!


டோலி தெரியுமா உங்களுக்கு? டோனி இல்லை சார். டோலி?

இந்த டோலி தான் முதன் முதலாய் ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆனவன்.

நாம் ஏதோ ‘அவன்’ ‘இவன்’ என்று டோலியை மனிதன் போல் பாவித்து பேசுகிறோம். ஆனால், இந்த டோலி மனிதன் இல்லை மிருகம். அதுவும் மனிதன் செய்த மிருகம்.

டோலி ஒரு செம்மறி ஆடு. இந்த செம்மறி ஆட்டை உருவாக்கியது விஞ்ஞானிகள். ஆனாலும் ஈன்றெடுத்தது மற்றொரு செம்மறி ஆடு.

“மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்”, என்று கூற முழு தகுதி உடையது இந்த டோலி செம்மறி ஆடு.

பூங்காவில் உள்ள ரோஜா செடியில் இருந்து காவலாளி பார்க்காத போது, ஒரு சிறு கிளையை ஒடித்து கிளப்பிட்டு வந்து, வீட்டு தோட்டத்தில் நட்டு வளர்த்து, ரோஜா பூ பூக்க வைப்பதும் க்ளோனிங் தான். இதுவோ செடி க்ளோனிங். இதிலும் மிருக க்ளோனிங் தான் இந்த டோலி செம்மறி ஆடு.


க்ளோனிங் என்றால் என்ன ? க்ளோனிங் என்றால் காப்பி அடிப்பது. அதான் சாரே, ஸெராக்ஸ் எடுக்கிறது தான் க்ளோனிங். அதைத்தான் மாணவர்கள் நாங்கள் தேர்வில் செய்கிறோமே. இதில் என்னத்த இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்கிறார்களோ? தெரியவில்லை. மாணவர்கள் எங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சமாவது இந்த விஞ்ஞானிகளுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பி அடித்து, மறந்தும் கூட அடுத்தவன் பரீட்சை எண்ணையே எங்கள் தாளிலும் எழுதாமல், மறக்காமல் எங்களுடைய தேர்வு எண்ணையே ஞாபகம் வைத்துக் கொண்டு எழுத வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது. அதில் ஒரு சதவிகித பொறுப்புணர்ச்சி இருந்தாலே விஞ்ஞானிகள் மனித க்ளோனிங் பற்றி சிந்திக்காமல் இருப்பார்கள்.


மனித க்ளோனிங் செய்யும் முறை என்னவென்றால், முதலில் பெண்ணிடம் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அந்த கரு முட்டையில் உள்ள நியூக்ளியஸ் நீக்கப் படும்.
அடுத்ததாக ஆணிடம் இருந்து ஒரு செல் (அது எந்த செல்லாகவும் இருக்கலாம்) எடுத்து வைத்துப் படும்.

பிறகு ஆணுடைய செல்லும், பெண்ணுடைய நியூக்ளியஸ் இல்லாத கரு முட்டையும் மின்சாரத்தின் உதவியோடு இனைக்கப்படும்.

ஆணுடைய செல்லை உள்கொண்ட அந்த கருமுட்டை இப்போது பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.

அவ்வளவுதான். பத்தே மாததில் சூடான குழந்தை தயார் ! !! !! !

பின்னே என்ன சார், டி.வியில் காய்கறி நறுக்கி போட்டு சமையல் குறிப்பு சொல்ற மாதிரின்னா சொல்றா. மனுஷாளை உருவாக்க மின்சாரம் போதுமாம் சார். கேட்கவே விரசமா இல்லியோன்னா. காதல் எனும் மின்சாரம் இருக்கச்சே இந்தெ கரன்ட் வச்சு கொழந்த பெத்துக்கறது எல்லாம் பிரம்மாவுக்கே அடுக்காது, ஆமாங்கானும். அதிலும் திருப்போருர் முருகன் கோவிலில் பிள்ளை பொறக்கவேனும்னு நினைச்சிண்டு மரத்தில் கடுதாசி எழுதி வச்சா, மத்ததை அந்த கந்தசாமி பாத்துப்பான். அத எல்லாம் விட்டுட்டு இந்த க்ளோனிங் கிளீனிங் எல்லாம் நமக்கு சரிப்படுமா. சித்தெ என்னிய தனியா இருக்க விடறேளா !!

……………
……………
……………
……………
……………
……………

அதிலும் கணவன் வெளிநாட்டிலோ, வெளி மாநிலத்திலேயோ இருந்து மனைவியை வந்து காண முடியாத நிலை, மற்றும் முக்கிய வேலை பளு எனில் தன்னுடைய செல் ஒன்றை எடுத்து எஃஸ்பிரெஸ் டெலிவெரியில் கொரியர் அனுப்பி வைத்தால், பத்து மாதத்தில் சூடான குழந்தை டெலிவெரி நடக்கக் கூடும், இந்த மனித க்ளோனிங்கால்.

இந்தியாவிற்கு மனித க்ளோனிங் தேவையா ?
இந்தியாவில் இப்போதே 120 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தியாவில் ஏற்கனவே வேலையின்றி பல கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் க்ளோனிங்க் ஒன்றுதான் குறைச்சல். போங்க சார் ! போய் செவ்வாய் கிரகத்தில் சோறு பொங்கி சாப்பிட முடியுமான்னு மொதல்ல பாருங்க சார்.

ஹரீஷ்

எந்திரன் பன்ச் டயலாக் !!


இவ்வளவு நாட்கள் ஆகிறது எந்திரன் படப்பிடிப்பு தொடங்கி. எந்திரன் பன்ச் டயலாக் இன்னும் இனையத்தில் உலா வரவில்லை என்ற சிறு ஏக்கத்தின் காரணமாக தொடங்கப் படும் சில “பன்ச் டயலாக்” வரிகள்.

இதோ உங்கள் பார்வைக்கு, அந்த கற்பனைகள்.

*********************************************************************************

ஹே ஹே ஹே….. ஹே…
எந்திரா,
உனக்குள்ள இருக்கிறது வெறும் பிராஸசர் (Processor)
இந்த மந்திரன்,
எனக்குள்ள இருக்கிறது பெரும் ராட்சஸன்
ஹாங் … ஹாங் … ஹாங் !!

*********************************************************************************

உனக்குள்ள வெறும் புரோகிராம் (Program)
இந்த உலகத்துக்கே தெரியும்
என் பராக்கிரமம் !

*********************************************************************************

ஹே எந்திரா, உங்கிட்ட இருக்கு ரேம் (RAM)
ஆனா என் கிட்ட இருக்கிறது
ராம் !! … ஸ்ரீ ராம் !!!! ஜெய் ஸ்ரீ ராம் !!!!

ரேம் (RAM) கொஞ்ச நேரந்தான்
ராம் எல்லா நேரமும் !!
தெரிஞ்சுக்க புரிஞ்சிக்க பேசாதே !!!

*********************************************************************************

உனக்குள்ள இருக்கிறது எலெக்ட்ரிக் மோட்டார் (Motor)
நான் எகிறி அடிச்சா நீன் டார் டார் ……. !!!!

*********************************************************************************

(எந்திரனிடம்)
கண்ணா என்னை ஆக்கியது அவன் (கை விரலை வானம்
நோக்கி காட்டி).

ஆனா உன்னை ஆக்கியது இவன் (கை விரலை தன்
நெஞ்சை நோக்கி காட்டி).

என்னை அழிக்க அவனாலதான் முடியும் (மீண்டும் கை விரலை
வானம் நோக்கி காட்டி).

உன்னால முடியாது ! (கை விரலை எந்திரன் நோக்கி காட்டி)

*********************************************************************************

கண்ணா,
உணர்ச்சி உனக்குள்ள பதிஞ்சிதான் இருக்கு
ஆனா
அதுவே எனக்குள்ள புதைஞ்சிருக்கு !!!

*********************************************************************************

நீ வாழ தேவை
ஒன்னும்(1) பூஜ்ஜியமும்(0) தான்.

ஆனா நான் வாழ தேவை
இந்த மண்ணும் மக்களும் தான் !!!

*********************************************************************************

எந்திரா……
நீ மக்கர் பன்னினாலும்,

அத டக்கர் பன்ன
இந்த மந்திரன் தான் வேனும் !!!

*********************************************************************************

உனக்கு தெரிஞ்சது வெரும்
சேவ் ப்ரோகிராம் ( Save Program)

ஆனா
இந்த அருனாச்சலத்துக்கு தெரிஞ்சது
சிவ புரானம் …

சிவன் Save-ஐயும் அழிச்சிடுவான் !!

*********************************************************************************

கண்ணா
உனக்கு கம்பைல்(compile) ஆகி ரன்(run) ஆனாதான் வாழ்க்கை

ஆனா
நமக்கு கம்பஞ்சோறும் ரவா கஞ்சியும் இருந்தாலே ஓடும் வாழ்க்கை !!

*********************************************************************************

என் மூளையில் செதுக்கிய
சாதாரன சிலை தான் நீ.

உன்னை செதுக்கின எனக்கு
சிதைக்கவும் தெரியும் !!

*********************************************************************************

நீயெல்லாம் எனக்கு ஜுஜூப்போ !!

பி.கு : தற்காலத்தின் ஜுஜூபி தான் ரோபோ காலத்தின் ஜுஜூப்போ

*********************************************************************************

கண்ணா
நீ பார்த்தா
அது பிஃஸெல் (pixel)

அதையே நான் பார்த்தா
அது மின்னல் !!

*********************************************************************************

ஹே
உனக்கு இதயம் இரும்பு
எனக்கு இதயம் கரும்பு !!

*********************************************************************************

நாங்க சோற திங்கிறவங்க
உன்னால சேற கூட திங்க முடியாது !!

*********************************************************************************

கண்ணா
நீ தப்பு செஞ்சா அது எர்ரர் (Error)
நான் தப்ப தட்டி கேட்டா அது டெர்ரர் !!

*********************************************************************************

எந்திரனில் இரண்டு ரஜினி என சொல்லிக் கொள்கிறார்கள்.
அதனால், நிஜ ரஜினி கிட்ட, எந்திரன் ரஜினியை பார்த்தவர்கள்
என்ன சொல்வார்கள் ?

உன்னைப் போல் ஒருவன்

*********************************************************************************

கண்ணா …
நீ ஒன்னுலயும் (1) பூஜியத்திலயும் (0) அடங்குற
சாதாரண இயந்திரம்.

நான்
பூஜியத்தில் ஆரம்பிச்சு ராஜியத்தில் முடியற மந்திரம் !!

*********************************************************************************

உங்களுக்கு தோன்றும் பன்ச் டையலாக்கு களையும்
எழுதி அனுப்பலாம்.

எந்திரனை எதிர் நோக்கும்
அன்பன் ஷ்….
ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்