மூளைக்குள் சாலை !!



செய்திகளைத் தேட, கூகுள் (Google) தேடல் இயந்திரம், யாஹூ(Yahoo) தேடல் இயந்திரம், மைக்ரோசாஃப்ட்(Microsoft) தேடல் இயந்திரம் எனப் பல தேடுதல் இயந்திரங்கள் இருக்கின்றன. இவற்றை விட மிகச்சிறந்த செய்தித் தேடல் கருவி எது என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுவோர் மேலே தொடரலாம்.

செய்திகளை சேமிக்க, ஆரக்கில்(Oracle) டேட்டாபேஸ், சைபேஸ்(Sybase) டேட்டாபேஸ், DB2 டேட்டாபேஸ் எனப் பல டேட்டாபேஸ்கள் இருக்கின்றன. இருந்தாலும் மிகச்சிறந்த செய்தி சேமிக்கும் கருவி எது தெரியுமா ?

இப்போதோ இன்டெல் ப்ராஸெசர் (Intel Processor), சென்ட்ரினோ ப்ராஸெசர் (Centrino Processor), இந்த சர் அந்த சர் எனப் பல ப்ராஸெசர்கள் (Processor) பிரானனை வாங்குகின்றன். ஆன போதிலும் உலகத்தின் மிகச்சிறந்த செய்தி ப்ராஸெசிங் கருவி எது என்று தெரிந்தால் நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அந்த கருவி எது! என்று, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அந்த கருவி என்னவென்பதை இந்நேரத்தில் யூகித்திருந்தால், மூளை விழிப்புடன்தான் வேலை செய்கிறது என்று நமக்கு நாமே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.

வள்ளுவர் வாய் மொழியில் மொழிவதாயின்,
     அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
     உள்ளழிக்கல் ஆகா அரண்
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி; பகைவர்களால் கூட அழிக்க முடியாத அரண்.

இப்போது புரிகிறதா,
அப்படிப்பட்ட அறிவை தாங்கும் அற்புத ஆச்சரியக் கருவி நமது மூளையேதான் !!

ஆம், நமது மூளைதான் உலகத்தின் மிகச்சிறந்த தேடுதல் இயந்திரம், டேட்டாபேஸ் மற்றும் ப்ராஸெசர்.

மூளையை பற்றிப் பேச பல நல்ல விஷயங்களும், சில தீய விஷயங்களும் இருக்கின்றன.
தீமையை விடுத்து, நன்மையை மட்டும் நாடி, ‘பெரிதினும் பெரிது மற்றும் பேசுவோம்’.

மனிதன் உருவாக்கிய தேடுதல் இயந்திரங்கள், டேட்டாபேஸ்கள், ப்ராஸெசர்கள் எல்லாம் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பான அறைகளில் வைக்கப்படுகின்றன.
சாதாரனப்பட்ட இயந்திரங்களுக்கே சூட்டைப் போக்க, தாக்குதலில் இருந்து தப்பிக்க, வசதி தேவைப்படுகிறது. இதை விடவெல்லாம் மிகச்சிறந்த மனித மூளைக்கும், இயற்கை இயல்பாகவே பல பாதுகாப்பு அரன்களை வைத்து இருக்கிறது. அதாவாது மூளையை மண்டை ஓட்டுக்குள் வைத்து, மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் உராய்வை தவிர்க்க, இடையில் திரவமும் வைத்து இருக்கிறது.

இயந்திரங்கள் எதிர்பாராமல் பழுது அடைந்தால், மற்றொன்றை வைத்து சேவையைத் தொடர்வது சாத்தியம். மேலான்மையில்(Management) அதனை, தொழில் தொடர்ந்திடும் யுக்தி (Business Continuity Plan) அல்லது மாற்று யுக்தி (Contingency Plan) எனக் கூறுவர்.
மூளையில் இது எல்லாம் சாத்தியம் இல்லை. முனுசாமி மூளையை மூனு நாளைக்கு, மயில்சாமி கடன் எல்லாம் வாங்க முடியாது.

மூளையில் உள்ள திசுவின் பெயர் நியூரான்.
ஒரு நாடு என்றால் அதற்குள் பல நகரங்கள் இருக்கும். நாட்டில் உள்ள நகரங்களை இனைப்பது சாலைகள். அதைப் போல மூளை எனும் நாட்டிற்குள், நியூரான் எனும் நகரங்கள் இருக்கின்றன. ஒன்று இரண்டு நியூரான் அல்ல; நூறு பில்லியன் நியூரான்கள். குழந்தையாய் பிறக்கும் போதே இந்த நியூரான்கள் உருவாகிவிடுகின்றன. ஆனாலும் எந்தெந்த நியூரான் நகரங்கள் இனைத்து சாலை இனைக்கப் படுகிறதோ, அதற்கு தகுந்தார் போல்தான் மனிதர்கள் உருவாகிறார்கள். இந்த நியூரான்களின் இனைப்பே, உருவாவது காந்தியா? ஹிட்லரா? என்பதை நிர்னயிக்கிறது.

பிறந்தவுடன் நியூரான்கள் இனைப்பு பெறாமல் இருக்கும். குழந்தை வளர வளர இந்த நியூரான்கள் சிறிது சிறிதாக இனைப்புப் பெறுகின்றன.

பெண்களின் தங்க நகைப் பிரியம், மாமியார் மருமகள் உறவு, அரசியல்வாதியின் கொள்கைகள் எல்லாம் எந்த நியூரான் முடிச்சு என்று அறிந்து கொள்ள உள்ளே நுழைந்தால் நாம் தொலைந்து தான் போவோம்.

நியூரான்களில் முக்கியமான மூன்று பகுதி, உடல்(Body), டென்ரைடெஸ்(Dendrites) மற்றும் அஃஸான் (Axon). செய்திகளை மற்ற நியூரான்களிடம் இருந்து உள்ளே கொண்டு வர டென்ரைடெஸ்(Dendrites) பயன்படுகிறது. ஒரு நியூரானில் இருந்து மற்றொரு நியூரானுக்கு செய்தி அனுப்ப அஃஸான் (Axon) பயன் படுகிறது.
மனிதன் வளர வளர நியூரானில் உள்ள டென்ரைடெஸ்(Dendrites) கிளை விட்டு கிளை விட்டு பல நியூரான்களிடம் இருந்து தகவல் பெறும் ஆற்றலைப் பெருகிறது.
அதாவது டென்ரைடெஸ்(Dendrites) என்பது செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை நிருபர் என்று கொண்டால், அஃஸான் (Axon) என்பது செய்தி விநியோகிக்கும் பத்திரிக்கை எனக் கொள்ளலாம்.

இயற்கையின் படைப்பான மூளையிலும் வலது இடது இருக்கிறது. வலது மூளை இடது பக்க உடலையும், இடது மூளை வலது பக்க உடலையும் கட்டுப் படுத்துகிறது.

சாதி, மதம், இனம், மொழி, வர்க்க பேதமின்றி அனைவருக்கும் மிக நிறையவே நியூரான்கள் இருக்கிறது. இதில் கீழோர் என்றும் மேலோர் என்றும் யாரும் இல்லை.

காந்திஜி கூறியது, நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன, என்று.

அப்படிப் பட்ட தூய நோக்கம் ஒருவருக்கு எப்படி அமையும் என்றால், நல்ல வளர்ப்பு முறையாலும், கல்வி முறையாலும், சிறந்த சுற்றுப்புற சூழ்நிலையாலும், செம்மையான சமூகமும் சேர்ந்துதால்தான் சாத்தியம்.

இப்படிப்பட்ட தூய நோக்கம் கொண்ட நியூரான்களின் இனைப்பை அடைந்து விட்டால், மூளை இனிதே !! நாளும் இனிதே !!


ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்