சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


காலப்  போக்கில் கல் தோன்றி; மற்றோர் நாள் மண் தோன்றி; அன்றோர் நாள் அமீபா(Amoeba) தோன்றி; வருடங்கள் உருண்டோடி குரங்கு உருவாகி; பரிணாம வளர்ச்சியில் பின் தோன்றிய பழங்குடிகளில், மூத்த குடியான திராவிடர்கள் தோற்றுவித்த உன்னத மொழி, உயிர் மொழி - தமிழ் மொழி !

அப்படிப்பட்ட தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழுப்பும் இவ்வேளையில், சந்து வழியாக சமஸ்கிருத கும்பல், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிக்க முயற்சி செய்கிறது.

நல்ல வாய்ப்பாக,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
போல், திராவிடர் கழகம்தான் இந்த சந்து வழி சமஸ்கிருத எழுத்துத் தினிப்பு முயற்சியைக் கண்டுபிடித்து, எழுத்து தினிப்பைத் தடுக்க தடுப்பணையும் போட்டுள்ளது.

விழிக்கு எப்படி ஒளி பிரதானமோ, அப்படியே மொழிக்கு ஒலி பிரதானம். எந்த ஒரு மொழிக்கும், ஒலி மிக முக்கியம்; அந்த ஒலிகளுக்கு இணையாகத்தான் எழுத்துக்கள் வருகின்றன. தமிழில் பல சிறப்பான ஒலிகள் உள்ளன. அதாவது, 'எ' 'ஒ' 'ற' 'ன' 'ழ'  போன்றவை.

'வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி.  சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.

தமிழின் மேன்மையைப் பாருங்கள்; தமிழோ, 'எல்லாமே நம் ஊர்தான்; எல்லோரும் நம் உறவினர்' 'பிறப்பால் எல்லா உயிரும் சமந்தான்' என்று கூறி இணைக்கிறது. அதாவது, காசியும் நம் ஊர்தான், கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியும் நம் உறவினர்தான், எனும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டது தமிழ் மொழி. நமக்கு மனிதர்கள் எதிரிகள் இல்லை; சில 'மனிதர்களின் தீய கொள்கைகள்தான் எதிரிகள்'. இந்த தீப கர்பத்தில், திராவிடர்களுக்கு பார்ப்பனர்களின் பார்ப்பனீயம்தான் தீய கொள்கையாக இருக்கிறது. பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இல்லை திராவிடர் கழகத்தினர். மாறாக, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்ப்பவர்கள்.
  
திராவிட மொழிகளுக்கு எல்லாம் தமிழே வேர் மொழி. அந்த வேரில் விஷத்தை ஏற்றினால், மரம் கிளைகளுக்கும் பரவிவிடும் என்ற எண்ணத்தில், விஷமிகள் விஷக் கிருமிகளை வேரில் புகுத்த எத்தனிக்கிறார்கள். பெரியார் வளர்த்த பகுத்தறிவுக் கூட்டத்திடம் பலிக்குமா இந்த விஷக் கிருமிகளின் விசேஷங்கள்? பலிக்காது! 
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
போல, நல்லதோர் சிந்தனைச் சிற்பிகளை அல்லவா தந்தை பெரியார் எனும் சமூக மருத்துவர் உருவாக்கியுள்ளார்கள்.

எது விஷக் கிருமி? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிப்பதுதான். சிறீராமன் சர்மா என்பவர் Unicode Consortium-க்கு ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார். என்ன விண்ணப்பம்? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் மொழி பெயர்க்க சிரமமாய் இருப்பதால், மொழி பெயர்ப்பை எளிதாக்க சமஸ்கிருத எழுத்துக்கள் 26 ஐ தமிழில் எழுத்தாக தினிக்க விண்ணப்பம் இட்டுள்ளார்.

தமிழகத்தின், மொத்த மக்கள் தொகையில்  6 கோடியே 25 லட்சம்  பேரில், நூற்றுக்கு நான்கு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இருக்க மாட்டார்கள் (இது உத்தேசமான கணக்குத்தான். அடுத்த வருடம் சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்தவுடன் உண்மை நிலவரம் அறியலாம்). அந்த நான்கு சதவீதத்தில் எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருக்கப் போகிறார்கள்?. நான்கு சதவீதம் என்று உத்தேசித்தால், தமிழக மக்கள் தொகையில், ஆறே கால் கோடி பேரில், வெரும் 25 லட்சம் மக்களுக்காக, மற்ற 6 கோடி மக்கள் புழங்கும் ஒரு மொழியில், சமஸ்கிருத மொழியின் எழுத்துகளை சேர்த்தால், ஏற்றுக் கொள்ளலாமா? உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் கூடுதல் பேருக்கும் இந்த 'சந்து வழி சமஸ்கிருதத்  திணிப்பால்' திண்டாட்டம் வந்து விடுமே! பார்த்தீர்களா இந்த சமஸ்கிருத கூட்டம் 'சந்து வழி சிந்து பாடுவதை'! இதைத் தடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா!? கடமை கிடக்கட்டும். இந்த சமஸ்கிருதத் தினிப்பை தடுக்க வேண்டியது நமது உரிமை அல்லவா!?

சமஸ்கிருத படைப்புகளை நம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, சமஸ்கிருத எழுத்தைத் தமிழில் தினிக்கப் பார்க்கிறார்கள். தமிழில் உள்ள உலகப் பொது மறையான உயரிய திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க சிரமமாய் இருக்கும் என்று கூறி, தமிழ் எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், இந்த 'சைட் வாசல் சமஸ்கிருதத் தினிப்பு' கூட்டத்திற்க்குப் பொறுக்குமா?

தமிழை நீச பாஷை என்றவர்கள் தான் சமஸ்கிருதம் போற்றும் சங்கராச்சாரியார்கள்.

"பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?" என்று தந்தை பெரியார் அவர்கள் கொதித்து எழுந்ததின் காரணத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.

தமிழ் செழுமையான மொழி. இந்த செழுமையான மொழியில் வார்த்தைகள் ஏராளம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வார்த்தைகள் கூட்டிக் கொண்டே போகலாம் - ஒலிகள் மாறாமல்.

தமிழ் ஓர் உயிர் மொழி. அதிலும், திராவிட மொழிகளுக்கு தமிழே ஆணி வேர். அந்த ஆணி வேரை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது சமஸ்கிருதத்தால்.
சமஸ்கிருதம் ஓரு பட்ட மரம்; தமிழோ வளரும் ஆல மரம்! தமிழனுக்கு என்றொரு நாடு, என்று பெருமை கொள்ளும் நாளும் வரும்.

உண்மையுடன் 
பொன்னியின்  செல்வன்

நன்றி : 

9 comments:

RaaM 4 February 2011 at 16:53  

Visham illa visam... vishesham illa visesam..!!! Ada pavi neeye tamila'la ippadi samaskritham sekiriye :)
Anbudan,
Thozhan..

tamilan 4 February 2011 at 17:19  

சுட்டியை சொடுக்கி படிக்கவும்

1. ===> இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


2. ===> ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.

.

ப.கந்தசாமி 4 February 2011 at 17:37  

தமிழை அழிக்கத் தமிழர்களே போதுமே, பார்ப்பனீயர்கள் எதற்கு? "ன" வுக்கும் "ண" வுக்கும் உள்ள வேறுபாடு அறியாத தமிழர்கள் போதுமே?

tamilan 4 February 2011 at 18:37  

//DrPKandaswamyPhD . 4 February 2011 17:37 ... said

தமிழை அழிக்கத் தமிழர்களே போதுமே, பார்ப்பனீயர்கள் எதற்கு? "ன" வுக்கும் "ண" வுக்கும் உள்ள வேறுபாடு அறியாத தமிழர்கள் போதுமே? //

துக்ளக் "சோ" வும், "இந்து மதம் எங்கே போகிறது" என்ற நூல் எழுதிய அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரும் "பிராமணன்" என்றே குறிப்பிடுகிறார்கள்.

இருவரும் எந்த இனத்தவர் என கூறவும் வேண்டுமோ?

..

பொன்னியின் செல்வன் 5 February 2011 at 03:18  

ராம் நண்பா,
பின்னூட்டதிற்கு நன்றி
வார்த்தை முக்கியமாக படவில்லை.
உள்ளடி வேலைகள் பற்றிய கருத்து, போய் சேர வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு எழுதியது தான் காரணம்.

--
தமிழன் அவர்களே, வணக்கம்.
பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் வலை பூவில் சில இடுகைகளை வாசித்து பார்த்தேன்.
வாழ்த்துக்கள்!
திரு.பழனியப்பன் கந்தசுவாமி (அல்லது 'கந்தசாமி' ) அவர்களின் பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

--
திரு.பழனியப்பன் கந்தசுவாமி (அல்லது 'கந்தசாமி' ) அவர்களே வணக்கம்.
பின்னூட்டத்திற்கு நன்றி!

கட்டுரையின் கருத்தில் குறை ஏதும் இருப்பதை தெரியவில்லை.
தாங்கள் பெரியவர்கள்; அதை நினைவில் கொண்டு,
மீண்டும் மீண்டும் இடுகையை படித்து, இதில் உள்ள சில எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுகிறேன்.

பொன்னியின் செல்வன் 5 February 2011 at 03:19  

தோழர்களுக்கு:
கீழ் கண்ட வார்த்தைகள் இந்த இடுகையில் திருத்தி வெளியிடப்படும்:
தடுப்பனையும் - தடுப்பணையும்
வீன் - வீண்
கன்ணை - கண்ணை
வின்னப்பம் - விண்ணப்பம்
வெண்டியது - வேண்டியது
ஏனி - ஏணி

Anonymous 19 February 2011 at 06:42  

Nanba.. Naan Pradeep (Pune).. ennai nyagam irukiradha?? :) Vegu natkal kazhithu un katturaigalai vaasithu rasithen.. Naan padithukondirundha kaalathil nee ezhudhiya katuraigalai idhudan oppidugaiyil, un ezhuthilum karuthilum pala matrangal ullana..

// வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி. சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.
//

samathuvam potrum mozhi thamizh mozhi endru mattum ezhudaamal, samaskridhathil ulla thazhvugalai ezhudhi, adhai thamizhin ettrangaludan oppiduvadhu nyayam illai.. samathuvam than peridhu endru koorum neeye ella mozhigalayum samamaaga paarkadhadhu yen ?

(( Nalla thamizhle than ezdhunumnu try panninen, edhachu comedya irundha free'ya vitru :P ))

பொன்னியின் செல்வன் 20 February 2011 at 19:42  

பிரதீப்... மச்சி ... எப்டி இருக்க ..... Fine ?

/ Vegu natkal kazhithu un katturaigalai vaasithu rasithen.. /
நன்றி நண்பா ...

/ Naan padithukondirundha kaalathil nee ezhudhiya katuraigalai idhudan oppidugaiyil, un ezhuthilum karuthilum pala matrangal ullana.. /
உண்மைதான் நண்பா... முன்பெல்லாம் எழுதியது Time Pass-க்கு, எழுத்து திறனை பரிசோதித்து கொள்ள என்று.. பின்னர், தந்தை பெரியாரை வாசித்த பிறகு(வாசித்தும் கொண்டு இருக்கிறேன்), எழுத்துக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்று, இப்பொழுது எழுதுவது உண்மையோடும், ஆராய்ச்சி செய்தும், ஆதாரத்தோடும் எழுதுவதால், மாற்றம் அதிகம்தான் நண்பா.. பெரியாரை வாசித்ததால் வந்த மாற்றம் இது.


/ samathuvam potrum mozhi thamizh mozhi endru mattum ezhudaamal, samaskridhathil ulla thazhvugalai ezhudhi, adhai thamizhin ettrangaludan oppiduvadhu nyayam illai /
தமிழின் ஏற்றத்திற்கு தமிழ் தனித்து இருந்தாலே கூட சாத்தியம்.இதற்கு பிற மொழி தழுவல்கள் தேவையே இல்லை. குறிப்பாக வழக்கிலே இல்லாத சமஸ்கிருத தழுவல் துளியும் தேவை இல்லை.. தமிழின் மேன்மையோடு சமஸ்கிருதத்தின் தத்துவங்களை ஒப்பிடுவது என்ன, வேண்டும் என்றா செய்கிறோம்? ... சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் திணிக்க முயற்சி நடக்கும் போது தான் சொல்கிறோம்... இது Survival of Fittest ... தமிழை தற்காத்து கொள்வதற்கான முயற்சி ! தமிழில், மென்மேலும் வார்த்தை வரத்துகள் வர வேண்டும்; அதுவும் தமிழ் ( சமத்துவமும், நல்ல சிந்தனையும் ) மேன்மையுற வேண்டும் என்பதற்காக. ஆனால் தமிழ் மொழியையே சிதைக்கும் வண்ணம் எந்த முயற்சி நடந்தாலும் அதை எதிர்ப்பது நியாயம்தான் நண்பா..


/ samathuvam than peridhu endru koorum neeye ella mozhigalayum samamaaga paarkadhadhu yen ? /
சமத்துவம் தான் பெரிது என்பதை புரிந்து கொண்டதற்கு நன்றி :) .......
எந்த மொழியெல்லாம், மனிதர்கள் சமத்துவத்திற்கு எதிராக இருந்தாலும் அந்த மொழி எல்லாம் நமக்கு ஏற்ற மொழி இல்லைதான்.
நல்ல வாய்ப்பாக தமிழ் மொழியில் அப்படிப்பட்ட கஷ்டம் இல்லை...
சமஸ்கிருதத்தில் அந்த கஷ்டம் இருக்கிறது ...
மனிதர்க்காகத்தான் - மொழியே தவிர, மொழிக்காக - மனிதர்கள் இல்லை...


/ (( Nalla thamizhle than ezdhunumnu try panninen, edhachu comedya irundha free'ya vitru :P )) /
மச்சி அதெல்லாம் free-யா விடு நண்பா .. :) :) எந்த தவறான கேள்வியும் கேட்க வில்லை ... மென் மேலும் கேள்விகள் வரவேற்கப் படுகிறது !

Anonymous 6 October 2012 at 15:41  

YOU ARE COMPLETELY WRONG.....TAMIL ONLY CAME FROM SAMASKRUTHAM....STOP WRITING EVIL ABOUT SAMASKRUTHAM.....

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்