சால்வையால் சோர்ந்தவன்

லோ! என்ன அப்டி பாக்கறீங்க? நாந்தான் அரசியல்வாதியோட மனசாட்சி பேசறேன். எசமான் தூங்கிட்டு இருக்கார்.

சால்வை போர்த்திக்கொண்டும் போர்த்தப்பட்டுக் கொண்டும் இருக்கும் சாட்சாத் சால்வை அரசியல்வாதியேதான் பேசறேன். அரசியல்வாதின்னா அரசியல்வாதியில்ல; அவரோட மனசாட்சி தான் பேசறேன்.

எங்க போனாலும், எந்த மேடைக்குப் போனாலும், எந்த நிகழ்சிக்குப் போனாலும், கூடவே சால்வை தூக்கிக்கிட்டு போக வேண்டியிருக்கு; இல்லைன்னா வரும்போது சால்வையோட வர வேண்டியிருக்கு.

ஏதாவது நல்ல சில்க்ஸ் கடை இருந்தா சொல்லுங்கள். அதுவும், குறைவான விலையில் சால்வை வாங்கவும்; விழாவில் பெற்ற சால்வையை, நிறைவான விலையில் விற்கவும்.

என்னது? அந்த சில்க்ஸ் எம்போரியத்தையே நாந்தான் தொறந்து வெக்கனுமா? அடடே! எனக்கு இந்த புகழ் எல்லாம் பிடிக்காது; அத மொதல்லயே சொல்லிடுங்க. ஏதோ நீங்க வற்புறுத்தி கேக்கறதால ஒத்துக்கறேன். அப்புறம் சிம்பிளா கேபிள் டி.வி லைவ் டெலிகாஸ்ட் பண்ணினால் போதும். எனக்கு இந்த விளம்பரம் எல்லாம் அலர்ஜி, அதனாலதான் பாருங்க.

நீங்க நெனப்பீங்க, இவரு வந்து கடையை தொறந்துவெச்சா பணம் தரனுமா?-ன்னு. அதப்பத்தி நீங்க கவலையே படாதீங்க; இந்த மாதிரி, சீப்பா பணம் வாங்குற புத்தியெல்லாம் எனக்கில்ல. வேணுமுன்னா கர்ச்சீப்ல நாலு கொடுங்க; அதுவும் உங்க மன திருப்திக்காகத்தான். ஆங்....... இத சொல்ல மறந்துட்டேனே! கர்ச்சீப்-ன உடனே ஒரு ஜானுக்கு-ஒரு ஜான் அளவு சைஸ்னு சீப்பா எட போட்றாதீங்க; ஒரு அடிக்கு-ஒரு அடி சைஸ் கர்சீப். பாருங்க, மக்கள் பணிக்காக ஓயாமல் வேர்வை சிந்தி உழைக்கிறோம்ல; அதான்! அதுலயும் தங்க ஜரிகை வெச்ச கர்ச்சீப்னா ரொம்ப ஷேமம்! இதுல ஒரு அடியா-ரெண்டு அடியாங்குறதா முக்கியம்? நீங்க நல்ல படியா ஜவுளி கடை நடத்தனும்; அதானே முக்கியம்.

பொங்கல் வேற வருதேன்னு, என்னைய உங்கள் ஜவுளிக்கடையிலேயே இலவசமா துணி எடுத்துக்க சொல்லி வற்புறுத்தாதீங்க. ஏன்னா இலவசங்களை கடுமையாக எதிர்ப்பவன் நான். அப்புறம் என் டிரைவர் பொங்கல் சமயத்தில் உங்களைப் பார்க்க வருவார். மேற்படி விஷயங்களை டிரைவர்கிட்ட பேசிக்கங்க. டிரைவர் குடும்பமும் சின்னதுதான்; அதுனால உங்களுக்கும் செலவு ஒன்னும் அதிகம் இருக்காது. மேற்படி, கவணிக்க வேண்டியதை கவனிச்சு விட்றுங்க.

இந்த சால்வை போத்தறவங்களும் சரியான அளவான சால்வை போத்தறாங்களான்னா அதுவும் இல்லை. பல நேரத்துல அவங்க போத்தற சால்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு, அவங்க போத்தற சால்வை பெரிசுதான்னு காட்ட நான் படுற கஷ்டம் எனக்குல்ல தெரியும்.இந்த லட்சனத்தில் போட்டோ வேற;என்னமோ நான் மயில் மாதிரியும், அவரு பேகன் மாதிரியும்!

சரிங்க, சால்வை போத்தறதுன்னு முடிவு பன்னிட்டீங்க; அதை மடிச்சு வச்சபடியே அப்படியே கொடுக்க வேண்டியது தானே! அதையும் செய்ய மாட்டீங்க. மடிச்சு வெச்ச சால்வையை பக்கத்தில கொண்டு வந்து ஆசை காட்டிட்டு, சர்ருன்னு மயில் தோகை விரிக்கிற கணக்கா விரிச்சு போத்தி விட்டுடுறீங்க. இந்த மயில் தோகையை மறுபடியும் மடிச்சு, கவருக்குள்ளேயே திரும்ப வெச்சு, புது சால்வை மாதிரியே ஜவுளிக்கடையில விக்க நாயா பேயா அலையறது நாந்தானே. அந்த வலி, காசு கொடுத்து சால்வை வாங்கிய உமக்கு எங்கப் புரிய போது?

இது கூட சரிங்க, மயில் தோகையை கூட மண்ணிச்சிரலாம். ஆனாலும், பக்கத்தில வந்திட்டு, இந்த விரிச்ச சால்வையை கையில வெச்சுகிட்டு, உன் பேர மைக்ல சொல்ற வரைக்கும் காத்திருந்து, உன் பேர சொல்லி 'இன்னார் இன்னார் இப்போது இன்னாருக்கு பொன்னாடை அணிவிப்பார்' என்று சொல்லியவுடந்தான், கடமை உணர்ச்சியோட சால்வை போடுற உன்னை என்னய்யா செய்யறது. ஆமா, இந்த பொன்னாடை-யில இருக்க 'பொன்'-னுக்கு அர்த்தம் தெரியுமாய்யா உனக்கெல்லாம்?

அது என்னய்யா கலர் இது? உனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தியா? உனக்கு வேலையாகனும்னா, எனக்கு பிடிச்ச கலர்தான நீ வாங்கியாரனும்! எனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தாலாச்சும் நான் யூஸ் பன்னுவேன். உனக்கு புடிச்ச கலரா வாங்கியாந்தா ஜவுளி கடைக்குத்தான் போகும்.

இதுல சில அதிகப்பிரசங்கிகள் வேறு. அவங்கள்ளாம் செய்தித்தாள் படிக்கிறாங்களா? இல்ல வேனுமுன்னே அவமானப் படுத்தறாங்களா?-ன்னு தெரியல. பின்ன என்னங்க? போன கட்சியில இருந்து இந்த கட்சிக்கு வந்தப்புறமும், போன கட்சி கலர் போட்ட சால்வையோ துண்டோ போட்டா, இருக்கிற கட்சியோட தலைமை என்ன நினைக்கும்? தலைமை என்ன நினைக்குமோ ஏது நினைக்குமோ-ன்னு, தலைமைக்கு பிடித்த கலரில் சால்வை வாங்கிட்டு போய் பொன்னாடையைப் போர்த்தி; ஒரு போட்டோவாவது எடுத்துக் கொண்டு, சால்வையை மடித்தும் கொடுத்து விட்டு வந்தால்தான், உள்கட்சி அரசியலில் இருந்து தப்பிக்க முடியும்.

அரசியல்ல இந்த சால்வையெல்லாம் சகஜமப்பா! பொது வாழ்க்கைன்னு வந்துட்டா பலப் பிரச்சினைகளையும் போர்வையாவே போத்திகிட்டு படுக்குறவங்க நாங்க!

ஐயோ! எசமான் எந்திரிக்றாருன்னு நினைக்கிறேன்! நான் அவருக்குள்ள போறேன். அவரு என்ன தேடமாட்டாருதான். ஆனா எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குல்ல!

பொன்னியின் செல்வன்

1 comments:

Unknown 20 December 2009 at 14:12  

நண்பா,
அருமை! உனக்கொரு சால்வை வாங்கட்டுமா??

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்