பொய் எதிர்ப்பு சக்தி !!



பொய் எதிர்ப்பு சக்தி என்றால் என்னவென்று யோசிக்கக்கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி தெரியும், அது என்ன பொய் எதிர்ப்பு சக்தி ?
இதை வாசித்து முடிக்கும் போது அது தானாகவே தெரிந்து விடும்.

உண்மை என்ற ஒன்று இருப்பது போல், பொய் என்ற ஒன்றும் இருக்கிறது.
வள்ளுவன் கூறுவது யாதெனில்,
   பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
   எல்லா அறமும் தரும்
அதாவது, பொய் சொல்லாதவனுக்கு புகழ் வரும்; அவனை அறியாமலே மற்ற எல்லா நல்லதும் உண்டாகும்.

இதை மீறி, தனக்கு நல்லது உண்டாக வேண்டாம் என எண்ணி, ஒருவர் பொய் சொல்லும்போது, அவர் உள்ளே
  • இரத்த அழுத்த மாற்றம்
  • நாடித்துடிப்பு மாற்றம்
  • மூச்சு விடும் சுழற்ச்சியில் மாற்றம்
  • உடல் வெப்ப மாற்றம்
  • இதயத்துடிப்பு மாற்றம்
போன்ற பல மாற்றங்கள் ஏற்படும்.

ஒருவர் பொய் சொல்லும் போது, அவரையும் அறியாமல் டிரம்ஸ் சிவமணி, இதயத்தில் புகுந்து சற்றே வேகமாக ‘லப் டப், ‘லப் டப்’ ‘லப் டப்’ ’ இசைத்துக் கொண்டிருப்பார்.

பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க, இப்போது உண்மை அறியும் சோதனை கருவி , ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detectors / Polygraph) எல்லாம் வந்துவிட்டது. அது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு, சொல்லப்படுவது பொய்யா? மெய்யா? என்று கூறிவிடும்.

சில நேரங்களில் , உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்), பிரச்சினைகளையும் கூடவே கொண்டு வரும். கிரிக்கெட் வீரர் காம்ப்ளி-யிடம் உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்) சமீபத்தில் உபயோகப் படுத்தப்பட்டு, சச்சின் பற்றி தவறான கருத்துக்களை கூறி விட்டார். இதற்கு காம்ப்ளி மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

இப்படி சில நடை முறை பிரச்சினைகள் இருப்பதால், உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்) , இன்னும் முழுமையாய் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப் பட வில்லை.


பொய் சொல்லுபவர்களை கண்டு பிடிக்க மேலும் சில வழிகள் உள்ளன. அதாவது.

ஒருவர் பொய் சொல்லும் போது, அவர் தன்னுடைய முகத்தையோ, உதட்டையோ விரலால் தொட்டுக்கொண்டோ, காது மடலையோ, நாசி நுனியையோ விரலால் வருடி கொண்டோ இருக்கக் கூடும். இதை கருத்தில் கொண்டு எந்த அரசியல்வாதி பொய் சொல்லுகிறார் என்று பார்க்கலாம் என்று நினைத்தால், அதில் ஒரு சிக்கல். பின்னே, வரிசையாய் அனுமார் வால் மாதிரி எல்லா அரசியல்வாதிகளும் நடிகர்களாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த வித்தை எல்லாம் எடுபடாது. இந்த அனுமார் வால் இன்னும் எவ்வளவு தூரம் நீளுமோ தெரியவில்லை?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும் போது பெருவாரியான நேரங்களில் கண்ணைப் பார்த்து பேச மாட்டார்கள். அதுவும் குற்ற உணர்ச்சியின் காரணமாக.
இதிலும் கெட்டது குடி. கருப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டால் அதுவும் கடினமாகிவிடும், எதிரே இருப்பவர் நம்மிடம் பேசுகிறாரா இல்லை தூக்கத்தில் பேசுகிறாரா என்பதையே அறிய முடியாது, இதில் பொய் சொல்வதைப் போய் எப்படி கண்டுபிடிப்பது?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும் போது நீண்ட வாக்கியங்களை உபயோகப்படுத்தக் கூடும்.
அக்கா தன் தம்பியிடம், “டேய், ஃப்ரிட்ஜில் அடித்தட்டில் வச்சிருந்த சாக்லேட்டை நீ எடுத்து சாப்ட்டியாடா ? ”.
அதற்கு தம்பி, “நான் ஒன்னும் ஃப்ரிட்ஜில் அடித்தட்டில் இருந்த சாக்லேட் எடுத்து சாப்பிடல”, என்கிறான்.
அந்த தம்பி சாக்லேட் எடுத்து சாப்பிட்ட போது அது மேல் தட்டில் இருந்திருக்கலாம், யார் கண்டது?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும்போது பல விஷயங்களையும் சுற்றி வளைத்து பேசக்கூடும். மேலும் தேவையில்லாத விஷயங்களைக் கூறி மழுப்பவும் கூடும்.
இதில் அரசியல்வாதிகள் சற்றே சிறந்தவர்கள். இப்படித்தான் நிருபர் ஒருவர், “உங்கள் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேரவில்லை என்கிறார்களே, அது உண்மையா”, எனக் கேட்கிறார்.
அதற்கு அரசியல்வாதி, “எங்கள் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேரவில்லையா என எங்களைக் கேட்கிறீர்கள்” (அதான் கேட்டாச்சே சார்!) “நாங்கள் கூறுவது என்னவென்றால்” (அதை முதலில் சொல்லுங்கள் சார். ப்ளீஸ்,அடுத்த பேட்டி ஒன்னு இருக்கு) “எங்கள் தொகுதியில் மொத்தம் மூன்று அரசுப் பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி” (‘பெண்கள்’ சொல்லும் போது மட்டும் ஏன் சார் இளிக்கிறீங்க) ”இவற்றில் கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 200 மாணவர்கள் தான் அரசுப் பள்ளிகளில் இருந்து விலகி, வேறு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். இதுவே சென்ற ஆட்சியில் இந்த எண்ணிக்கை 400 ஆக இருந்தது” (அந்த பள்ளியின் மொத்த கொள்ளளவே 600 தான், சென்ற ஆட்சியில் 400, இப்போ 200. தேவலை, காமராஜர் கனவுக்கு கல்லறை கட்டியாச்சு !) ”இது சென்ற ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் பாதியாய் குறைந்துள்ளது என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்”
இப்படி, ஆம் / இல்லை என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை, மிகச் சுருக்கமாக ஒரு பத்தியில் கூறக் கூடும் !!!!



ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இரானுவத்தில், இரானுவ வீரர்களிடம் கையடக்க வடிவிலான பொய் கண்டுபிடிக்கும் இயந்திரமான ‘பொய் கண்டுபிடிப்பானை’ (Lie detectors or Polygraph) உபயோகிக்க கொடுத்து இருக்கிறார்களாம்.
நமது திருமணங்களிலோ, மணநாள் அன்று, மணமகன் கையில் மணமகளை கைப்பிடித்து கொடுக்கும் போதே மணமகனுக்கு ஒரு ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detector) கையில் கொடுக்கப் பட்டு விடுகிறது.

ஆம்! மிகப் பெறிய ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detectors) மனைவிகள் தான்!அவர்கள் தான் கனவனின் பொய் , பொய் சதவிகிதம், எதற்கு பொய் எல்லாத்தையும் சொல்லாமலே கண்டு பிடிப்பவர்கள்.

மனைவிகள் ஒரு கேள்வியை ஒருமுறைதான் கேட்பவர்கள் என்று தவறாக் எண்ணிவிடக் கூடாது. கணவர் பொய் சொல்லுகிறார் என்ற சந்தேகம் மட்டும் வந்து விட்டால் போதும், ஒரே கேள்வியை பல இடைவெளிகளில் பல சூழ்நிலைகளில் பல விதமாய் கேட்டு, பொய்யா ? மெய்யா ? என உறுதி படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள்.
மனைவி முன்னர் கேட்ட அதே கேள்வியை, இரண்டாம் முறையாய் கேட்டு விட்டால், கணவன் திகைத்து போய் அப்போதுதான் யோசிப்பார், போன தடவை என்ன சொன்னோம் என்று. இப்படியே சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிந்தால், உடனே தலைக் கவசம் ஏதேனும் எடுத்து மாட்டிக் கொண்டால், தம்பிரான் புன்னியத்தில் பூரிக் கட்டை தாக்குதலில் தலையாவது தப்பக்கூடும்.

சற்றே சமயோசிதமான புருஷர்கள் என்றால் பல சூழ்நிலைகளிலும் ஒரே பதிலைக் கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

இப்படித்தான்,
வெள்ளி இரவு, வேலை காரணமாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர தாமதம் ஆகும் என்பதை மனைவியிடம் தெரிவிக்க போன் செய்தால்.
“ஆபீசில் வேலை இருக்கிறது” (நண்பன் வீட்டில் பார்ட்டி!) , “நீ சாப்ட்டு தூங்கிடு. எனக்கு சாப்பாடு வேண்டாம்” (அதான் சைட் டிஷ் இருக்கே!)

மறுமுனையில் மனைவி, “சரிங்க…………..” என ஒரு மாதிரியாக இழுத்துக்கொண்டே, “ஏங்க, ஆபீசில் மல்லுக் கட்டறதுக்கு பதில் ராம் அண்ணா வீட்டுக்கு போய் அவங்க குழந்தையை பார்த்திட்டு வரலாம்ல, அந்த அக்காதான் ஊருக்கு போயிருக்காங்கள்ல, அவங்களுக்கும் துனையா இருக்கும்ல?”

நாமோ மனதிற்குள்ளாக, (அடிப் பாவி பொய் சொல்றதையும் கண்டு பிடிச்சு, பார்ட்டி நண்பனையும் கண்டுபிடிச்சு, லொகேஷனையும் கண்டு பிடிக்கிறாளே) என்று எண்ணிக்கொண்டு, “இங்கே தல போற வேலை இருக்கு, இதுல அவன எல்லாம் போய் இப்ப பார்க்க முடியாதும்மா”.

அவள், “ம்ம்ம்…. சரிங்க …. அந்த அண்ணன் வீட்டுக்கு போனால் அஞ்சப்பரில் இரால் வறுவல் வாங்கிட்டு போங்க-ன்னு சொல்லலாம்னு இருந்தேன். போன தடவை நம்ம வீட்டுக்கு அவங்க எல்லாம் வந்தப்ப அசைவம் சமைக்க முடியல, அதான்………. ”

நாமோ மனதிற்குள்ளாக, (போதும்டி, இப்ப சைட் டிஷ்ஷையும், கடையையும் கண்டு பிடிச்சிட்டியா, சந்தோஷமா?), என எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம், நான் அப்புறம் போன் செய்றேன்” என வைத்து விடுகிறோம்.

இப்படி, பேசும் போதே பொய்யையும் கண்டு பிடித்து விடுகிறார்கள் மனைவிகள்.
வேர் இஸ் தி பார்ட்டி டுனைட் (Where is the Party tonight) !! நண்பன் வீட்டில் !!!

இப்படியாக கணவன் கூறும் பொய்யை, எதிர்க்கும் சக்தியான மனைவியிடம் இருந்து தப்பிக்க, கணவர்கள் பெரும் பாடுதான் படுகிறார்கள்.

இப்போது தெரிகிறதா 'பொய் எதிர்ப்பு சக்தி' யார் என்று. ‘மனைவி’ தாங்க !!!

ஹரீஷ்

1 comments:

Gowri 28 February 2010 at 21:29  

nice!

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்