சூரியன் மீண்டும் உதித்தது. கை சூரிய நமஸ்காரம் செய்தது.
தாமரை பூ வாடியது. இலைகள் சுருங்கியது.
வெகு தூரத்தில் மெல்லிய முரசு சத்தம் கேட்கின்றது.
வெயிலின் கொடுமையால் நெற் கதிர் அறுக்க அரிவாளுக்கு வேலை இல்லை.
இது மாம்பழ சீசன், இருந்தும் மாம்பழம் ஒன்று கூட கிடைக்க வில்லை.
Disclaimer : இதில் உள்ள கருத்துக்கள் உயிருடன் உள்ள எவரையோ, அல்லது கடற்கரையில் சமாதியாய் இருப்பவரையோ , காலால் நடப்பவரையோ, சக்கர நாற்காலியில் நடப்பவரையோ, திறந்த வேனில் வலம் வருபவரையோ, ஹெலிகாப்டேரில் பறப்பவரையோ, ரதத்தில் வலம் வருபவரையோ நேரிடையாக குறிப்பிடப் படுவன அல்ல. முக்கியமாக மறைமுகமாக குறிப்பிடப் படுவன அல்ல.
வேண்டுமானால் வலது புறமாகவோ இடது புறமாகவோ குறிப்பிட பட்டு இருக்கலாம்.
இந்த கருத்துக்கள் எல்லாம் கற்பனையே. சில நேரங்களில் மட்டும் வாய் தவறி உண்மைகள் பொதிந்து இருக்கும்.
ஹரீஷ்
0 comments:
Post a Comment